Skip to main content

சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டினார்... நடிகர் ரித்தீஷ் மனைவி மீது பரபரப்பு புகார் 

Published on 18/05/2019 | Edited on 18/05/2019

 

நடிகர் ரித்தீஷ் மனைவி மீது சென்னையைச் சேர்ந்த ஒருவர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். 
 

சென்னை தேனாம்பேட்டை தாராநகரைச் சேர்ந்தவர் கேசவன். இவர் சென்னை பாண்டி பஜார் காவல்நிலைய காவல் ஆய்வாளரிடம் அளித்த புகார் மனுவில், 
 

கடந்த 10 வருடங்களாக நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்தீஷிடம் வேலை பார்த்து வந்தேன். இந்த நிலையில் அவர் எனக்கு நெம்பர் 24, சாம்பசிவம் சாலை, பாண்டி பஜார் என்ற விலாசத்தில் உள்ள வீட்டில் பராமரிப்பு வேலைகளை பார்க்க கடந்த 6 மாதம் முன்பு என்னிடம் வீட்டின் சாவியை கொடுத்தார். 

 

actor rithesh



நானும் பிளம்பர், கார்பென்டர், பெயின்டர், மார்பிள் பாலீஷ் செய்வதற்கு ஆட்களை வைத்து வேலை செய்து வந்தேன். இவ்வாறு பராமரிப்பு வேலை செய்தவற்காக இன்று வரை ரூபாய் நான்கு இலட்சம் வரை தரவேண்டியுள்ளது. ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த மாதம் ரித்தீஷ் காலமடைந்துவிட்டதால் வேலை ஆட்களுக்கு பணம் கொடுக்காததால் அவர்கள் அந்த வீட்டிலேயே தங்கி வந்தனர்.
 

இந்த சூழ்நிலையில் நேற்று இரவு சுமார் 7.35 மணி அளவில் ஐசரிகணேஷ் என்பவர் என்னை கைபேசியில் தொடர்பு கொண்டு அந்த வீட்டின் சாவியை ரித்தீஷின் மனைவியிடம் கொடுத்துவிட வேண்டும் என்றும், தவறினால் நீ உயிரோடு இருக்க மாட்டாய் என்றும் மிரட்டினார். பிறகு நான் சாவியை கொடுத்து விடலாம் என்று அந்த வீட்டிற்கு சென்றபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. 
 

பிறகு உள்ளே சென்று பார்த்தபோது ரித்தீஷ் மனைவி மற்றும் பத்திற்கும் மேற்பட்ட அடியாட்கள் உள்ளே இருந்தனர். அவர்கள் என்னை தாக்க இரும்பு கம்பியால் முயன்றும், ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி என்னையும், எனது மனைவியையும் அசிங்கமான வார்த்தைகளால் பேசியும் தாக்க முயன்றனர். 


 

ஜோதீஷ்வரி எனது மனைவியை அவருடைய கணவருடன் சம்மந்தப்படுத்தி அசிங்கமாக சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டியும், என்னை அசிங்கப்படுத்தி தாக்க வந்தனர். பணம் எதுவும் கொடுக்க முடியாது, மீறிக் கேட்டால் உன்னையும்  உன் குடும்பத்தையும் கொளுத்தி கொன்று விடுவோம் என்றும் மிரட்டினார்கள். இந்த மனுவை ஏற்றுக்கொண்டு எனக்கு சேர வேண்டிய பணம் ரூபாய் நான்கு இலட்சத்தை பெற்றுத்தர வேண்டும். எனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கும் என் குடும்பத்தாருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.