Skip to main content

தமிழகத்தில் 738 பேருக்கு கரோனா... சுகாதாரச் செயலாளர் தகவல் 

Published on 08/04/2020 | Edited on 08/04/2020

இந்தியாவில் வேகமாக பரவிவரும் கரோனா வைரஸ் 5000க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் இதனால் பலியாகியுள்ளனர். இதனையடுத்து இந்த வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.  

 

 738 people in Tamil Nadu affect in Corona... Health Secretary Information


இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கரோனா  தொற்று  இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் 738 பேருக்கு  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 48 பேரில் 42 பேர் டெல்லி சென்று வந்தவர்கள். இதில் தனியார் மருத்துவமனையில் 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. 72 வயது மதிப்பிடத்தக்க ஒருவர் உட்பட 21 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். இதனால் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது என்றார். 

 

சார்ந்த செய்திகள்