gh

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் உள்ள கீரமங்கலத்தில் திமுக தலைவர் கலைஞர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தொகுதி சமஉ மெய்யநாதன், மா செ பொருப்பு திருமயம் சமஉ ரகுபதி பங்கேற்றனர். சிறப்பு பேச்சாளராக திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு பேசினார்.

Advertisment

அவர் பேசும் போது.. இன்றைய அதிமுக ஆட்சி மோடியின் கைப்பாவையாக தான் நடக்கிறது. மோடி சொல்வதை தான் எடப்பாடி செய்து வருகிறார். அமைச்சர்களும் அதிமேதாவிகளாக உள்ளார்கள். இந்த மாவட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முழு உடல் பிசோதனை திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.. முதல்ல அந்த அம்மா உடலையே முழுமையா பரிசோதனை செய்யமுடியாதவர்கள் முழு உடல் பரிசோதனை திட்டம் அறிவித்திருப்பது வியப்பாகாக உள்ளது.

Advertisment

ஒவ்வொரு அமைச்சரும் ஒரு வழியில் செல்கிறார்கள். ஜெ சமாதிக்கு போன ஒ பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்தார். அடுத்து போன சசிகலா சிறைக்கு போ்விட்டார் ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு அங்கே போனார் நிதி அமைச்சர் போச்சு.. எடப்பாடி போனார் ஆட்சி ஊசலாடுகிறது.

இப்படி யார் ஜெ சமாதிக்கு போனாும் தங்கள் பவரை இழந்துவிட்டார்கள். தூத்துக்குடி சம்பவத்தில் போராடியவர்களை 13 பேரை சுட்டுக் கொன்ற பெருமை எடப்பாடியயே சேரும்.தற்போது மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள்விரோத அரசு தான் நடக்கிறது இந்த ஆட்சிக்கு நேரம் எணணப்படுகிறது என்றார்.

Advertisment