Skip to main content

கோயம்பேட்டில் ரசாயன மாம்பழங்கள் 7 டன் பறிமுதல் 

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

7 tons of mangoes that were ripened by spraying chemicals in Coimbatore seized

 

சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கனி அங்காடியில் ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட ஏழு டன் மாம்பழங்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் நேற்று பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

 

தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மாம்பழங்கள் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இப்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அதேபோல் வெளி மாநிலங்களிலிருந்தும் விற்பனைக்காக வரும் பழங்கள் கடைகளுக்கு வரும் பொழுது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இது தொடர்பாக அடிக்கடி உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்தநிலையில் நேற்று சென்னை கோயம்பேடு காய்கனி அங்காடியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர் .அப்பொழுது ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட சுமார் ஏழு டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மண்ணில் கொட்டி அழித்தனர். இப்படி செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிடுவதால் கண், வயிறு எரிச்சல் முதல் புற்றுநோய் வரையிலான உடல் உபாதைகள் ஏற்படும் என தெரிவித்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், ரசாயனத்தில் பழுக்கவைக்கப்பட்ட விற்பனை செய்த 20 கடை உரிமையாளர்களுக்கு விளக்கமளிக்க நோட்டீஸ் பிறப்பித்தனர். இனி இதுபோல் ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்கக் கூடாது என அங்கிருந்த விற்பனையாளர்களிடம் எச்சரிக்கை தெரிவித்து விட்டு சென்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உங்கள் குழந்தை செர்லாக் பேபியா?' -எச்சரிக்கை மணி அடித்த உலக சுகாதார அமைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Is your child a Cerelac baby?'-World Health Organization has sounded the alarm

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.

இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான  ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை  குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.