Skip to main content

சென்னையில் 10 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

Published on 10/03/2018 | Edited on 10/03/2018
chennai police


சென்னையில் 10 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில், 7 பேர் காத்திருப்போர் பட்டியலில் இருந்து பணியிடம் வழங்கப்பட்டுள்ளது.  

 

ஆய்வாளர் பாலகுமார் - ஜி-3 கீழ்பாக்கம் குற்றப்பிரிவுக்கும், ஆய்வாளர் அஜய்குமார் இ-4 அபிராமபுரம் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், ஆய்வாளர் பரணிதரன் என் -4 துறைமுகம் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும்,  ஆய்வாளர் சீனிவாசன் டி-1 அம்பத்தூர் குற்றப்பிரிவுக்கும், ஆய்வாளர் பீர்பாட்ஷா மத்திய குற்றப்பிரிவுக்கும், ஆய்வாளர் லலிதா w-19 அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், ஆய்வாளர் ஜெயந்தி பொருளாதார குற்றப்பிரிவுக்கும், ஆய்வாளர் சீதாராமன் திருமுல்லை வாயில் சட்டம் ஒழுங்கு பிரிவில் இருந்து டி-15 எஸ்.ஆர்.எம். போரூர் குற்றப்பிரிவுக்கும், ஆய்வாளர் டில்லிபாபு இ-1 மயிலாப்பூர் சட் டம் ஒழுங்கு பிரிவிலி ருந்து இ-2 ராயப்புரம் குற்றப்பிரிவுக்கும், ஆய்வாளர் கண்ணன் இ-2 ராயபுரம் குற்றப்பிரிவில் இருந்து  மயிலாப்பூர் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்