Skip to main content

கிரண்பேடிக்கு எதிராக சட்டப்பேரவையில் ஆவேசம்! அ.தி.மு.க - தி.மு.க மாறி மாறி வெளிநடப்பு!  

Published on 22/07/2020 | Edited on 22/07/2020

 

Kiran Bedi - narayanasamy

 

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஆளுநர் கிரண்பேடியின் எதிர்ப்பையும் மீறி ஆளுநர் உரையின்றி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பியது. 

 

இந்த நிலையில் கடந்த வாரம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கரோனா கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளைக் கடுமையாகப் பேசியுள்ளார். அதன் காரணமாக கடந்த 2  நாட்களாகக் கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள், ஊழியர்கள் 2 நாட்களாக கிரண்பேடியை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் திங்கள்கிழமை சட்டப்பேரவை நிகழ்விலும் எதிரொலித்தது. 

 

puducherry assembly

 

இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய காங்கிரஸ், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், 'மக்களின் உயிரைக் காக்கக்கூடிய கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களைக் கண்ணியமாகப் பாராட்ட வேண்டிய நிலையில் அவர்களைக் கடுமையாக விமர்சித்தும், மிரட்டும் தொனியிலும் ஆளுநர் கிரண்பேடி பேசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவர் மீது குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேரவையில் கண்டன தீர்மானம் இயற்ற வேண்டும் எனக் குரல் எழுப்பினர். 

 

இந்த விவகாரம் குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், "தமிழ் அதிகாரிகளை ஆளுநருக்குப் பிடிக்கவில்லை. கடந்த 100 நாட்களாக ஆளுநர் மாளிகையை விட்டு வெளியே வராத கிரண்பேடி பட்ஜெட் விவகாரத்தைத் திசைதிருப்ப ஆய்வு என்ற பெயரில் கரோனா பணியில் ஈடுபட்ட மருத்துவ அதிகாரிகளை மிரட்டியது கண்டனத்திற்குரியது. புதுச்சேரியில் கரோனா அதிகரித்து வருகிறது. படுக்கைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். ஒரு கட்டத்தில் ஆளுநர் மாளிகையைக் கூட கரோனா வார்டாக மாற்றலாமா என்று நாங்கள் முயற்சிக்கிறோம். இதுகுறித்து அங்கு ஆய்வு செய்யவும் தயாராக இருக்கின்றோம்" என ஆவேசமாகப் பேசினார். 

 

puducherry assembly

 

இதற்குப் பதிலளித்த "முதலமைச்சர் நாராயணசாமி, உயிர்காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிடம் கன்னியமாக நடந்துகொள்ள வேண்டும், ஆனால் அந்தக் கண்ணியத்தை நான் கிரண்பேடியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. கரோனா பேரிடர் காலத்தில் ஆளுநர் அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்" என்றார். 

 

http://onelink.to/nknapp

 

அதனையடுத்து ஆளுநர் மீது கண்டன தீர்மானம் எதுவும் முன்மொழியவோ, வழிமொழியவோ இல்லை. இருந்த போதிலும் இதுகுறித்து பேசிய சபாநாயகர் சிவக்கொழுந்து, "உயிரைக்காக்கும் உன்னதப் பணியில் ஈடுபடக்கூடிய மருத்துவர்களை நாம் பாராட்ட வேண்டும். அவர்கள் மனம் புண்படும் வகையில் அவமரியாதையுடன் பேசிய வார்த்தைகளை ஆளுநர் கிரண்பேடி திரும்பப் பெற வேண்டும், இல்லையெனில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்" எனக் கூறி பேரவையை 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 

இதனிடையே 'புதுச்சேரியில் தமிழக முன்னாள் ஜெயலலிதாவிற்குச் சிலை வைக்கக் கோரியதற்கு நடவடிக்கையில்லை. தி.மு.கவை மகிழ்ச்சிபடுத்த ராஜீவ் பெயரிலான திட்டத்தைக் கலைஞர் பெயருக்கு மாற்றி'யதாக புகார் கூறி அ.தி.மு.க உறுப்பினர் அன்பழகன் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அதேசமயம் 'அ.தி.மு.க உறுப்பினர்கள் கலைஞரை அவமதித்து பேசியதைக் கண்டித்தும், இதனைக் கண்டிக்காத அமைச்சர்களைக் கண்டித்தும் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சிவா, கீதா ஆனந்தன், வெங்கடேசன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.