Skip to main content

“அவர்கள் அதிமுகவுடன் சேர்ந்தால் மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும்; அது அவர்கள் கைகளில்தான் உள்ளது” - செல்லூர் ராஜு

Published on 10/12/2022 | Edited on 10/12/2022

 

“If they join the AIADMK, it will be a huge success; It is in their hands” Selur Raju

 

சொத்துவரி உயர்வைக் கண்டித்தும், மின்கட்டணம், பால் விலை ஆகியவற்றின் உயர்வைக் கண்டித்தும் பரவையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு  நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக மக்கள் எந்த மகிழ்ச்சியும் அடையவில்லை. தொழில்துறையில் பின் தங்கிவிட்டோம். நீட் தேர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது. நீட் ரத்து செய்வோம் என்று கூறினார்கள். அதுவும் இல்லை. ஆட்சியில் அமர்ந்து 2 வருடங்கள் ஆகிற்று. நாங்கள் கொண்டு வந்த மாதிரி எதாவது திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்களா. விலைவாசி அனைத்தும் உயர்ந்துள்ளது.

 

குஜராத்தைப் பொறுத்தவரை அமித்ஷா மற்றும் பிரதமரின் சொந்த ஊர். அங்கு பாஜக அதிகமாகவே உள்ளது. அதன் பின் அங்கிருக்கும் தமிழர்கள் பிரதமரின் நடவடிக்கையைப் பாராட்டி மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காகத் தமிழர்கள் ஓட்டளித்துள்ளனர். அதன் பிரதிபலிப்பு அனைத்துத் தேர்தலிலும் இருக்குமா எனச் சொல்ல முடியாது. கூட்டணி அமைவதை வைத்துத்தான் சொல்ல முடியும். இன்று பாஜக வளர்ந்து வருகிறது. அவர்கள் அதிமுகவுடன் சேர்ந்தால் அது மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும். அது அவர்களது கைகளில் தான் உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் கூட்டணி எல்லாம் பேசப்படும்.

 

கட்சியிலிருந்து தாவியவர்களைப் பற்றி எல்லாம் பேச முடியாது. கோவை செல்வராஜ் கட்சி தாவியதைப் பற்றிக் கேட்கிறீர்கள். கோவை செல்வராஜ் காங்கிரசில் இருந்து வந்தவர். எங்கள் கட்சியிலிருந்து பிரிந்து சென்று திமுகவில் இணைந்து அமைச்சராகவும் இருக்கின்றனர். கட்சி பிடிக்கவில்லை என்று இன்னொரு கட்சியில் இணைவது அவர்களது சொந்த விருப்பம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.