Skip to main content

எஸ்.சி அணி தலைவருக்கு ஹெலிகாப்டர்; அண்ணாமலை அறிவிப்பு

Published on 22/02/2023 | Edited on 22/02/2023

 

A helicopter for the leader of the list; Annamalai Notification

 

பட்டியலின அணியின் தலைவருக்கு வாங்கித் தரப்படும் புது காரை மீண்டும் உடைத்தால், அவருக்கு ஹெலிகாப்டர் கொடுக்கப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

 

தமிழ்நாடு பாஜகவின் பட்டியலின அணியின் தலைவராக செயல்படுபவர் தடா பெரியசாமி. இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள திருமாந்துறையில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவரது காரினை மர்மநபர்கள் சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. காரின் டயர்கள் கத்தியால் குத்திக் கிழிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு இருந்தன. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

மேலும், ராணுவ வீரர் ஒருவர் கிருஷ்ணகிரி பகுதியில் திமுக கவுன்சிலரின் உறவினர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் தமிழக பாஜக சார்பில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. கோவையில் நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், “பாஜகவின் பட்டியலின அணியின் தலைவராக இருக்கக் கூடிய தடா பெரியசாமியின் வீட்டில் மூன்று நாட்களுக்கு முன்பு தாக்குதல் நடந்திருக்கிறது. நான் தாக்குதல் நடந்த இல்லத்திற்கு செல்லவில்லை. செல்லப்போவதும் கிடையாது. எங்களுடைய பட்டியலின அணியின் தலைவரின் வீட்டை அடித்து விட்டீர்கள். காரை உடைத்து விட்டீர்கள். அதற்காக வருத்தப்படப் போவதும் கிடையாது.

 

அவருக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தான் சொன்னேன். உங்களுக்கு என்ன சேதம் அடைந்திருக்கிறதோ; அந்த கார் என்ன சேதம் அடைந்து இருக்கிறதோ, அதை இந்தக் கட்சி, கட்சியின் நிதியிலிருந்து சரி செய்து கொடுக்கும் என்று கூறினேன். காரை சரி செய்வதற்கான முழுச்செலவையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். சரிசெய்யப்பட்ட காரை மீண்டும் உடைத்தார்கள் என்றால் உங்களுக்கு பாஜக சார்பில் புது கார் கொடுக்கப்படும். அப்படி கொடுக்கப்பட்ட புது காரையும் உடைத்தார்கள் என்றால் ஹெலிகாப்டர் கொடுக்கப்படும். இதை நான் மேடையில் தலைவராக சொல்கின்றேன். இம்மாதிரியான செயல்களை எல்லாம் பார்த்து பயப்படுகிற கட்சி எங்கள் கட்சி அல்ல” எனக் கூறியுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.