Skip to main content

மக்களைப்பற்றி பேசாத ஒரு தலைவர்தான் ஸ்டாலின்... -எடப்பாடி பழனிசாமி

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரவக்குறிச்சியில் பிரச்சாரம் செய்தார் அப்போது அவர், திமுக தலைவர் ஸ்டாலின் குறித்தும், அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி குறித்தும் பேசினார். அவர் பேசியது...

 

edappadi palanisamy


ஸ்டாலின் பச்சை பொய் பேசுகிறார். எங்கே சென்றாலும் பொய் பேசுகிறார், உண்மையே அவர் வாயிலிருந்து வராது. நாங்கள் இவ்வளவு திட்டங்களை செய்வோம் என பேசுகிறோம். எங்கையாவது ஸ்டாலின் இந்த இந்த திட்டங்களை செயல்படுத்துவோம்னு சொல்றாரா? கிடையவே கிடையாது. ஒன்று என்னைப்பற்றி பேசுவார், இல்லையென்றால் எங்கள் அமைச்சர்கள் குறித்து பேசுவார், எங்கள் ஆட்சி குறித்து பேசுவார். வேறு எது பற்றியும் பேசமாட்டார். மக்களைப் பற்றி பேசாத ஒரு தலைவர்தான், திமுக தலைவர் ஸ்டாலின்.

திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி 5 கட்சிக்கு சென்று வந்துள்ளார். முதலில் மதிமுகவில் அரசியலை தொடங்கி, பின்னர் திமுகவிற்கு சென்று, அங்கிருந்து அதிமுகவாகி, பிறகு அம்முகவிற்கு சென்று, பிறகு திமுகவிற்கு போய்விட்டார். அமைச்சராக்கிய கட்சிக்கே துரோகம் செய்தவர், உங்களுக்கு எப்படி நன்மை செய்வார். 

 

 

சார்ந்த செய்திகள்