Skip to main content

பிக் பாஸ் லாஸ்லியாவின் காதலுக்கு தந்தை போட்ட அதிரடி கண்டிஷன்... வெளிவந்த ரகசிய தகவல்!

Published on 23/11/2019 | Edited on 23/11/2019

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கவின், லாஸ்லியாவின் காதல் விவகாரம் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் இவர்கள் காதல் பிரேக் ஆப் ஆகிவிட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த நிலையில் லாஸ்லியாவின் காதல் குறித்து அவரது தோழி ஒரு ரகசியத்தை வெளியிட்டுள்ளார். லாஸ்லியா, கவின் காதல் பிரேக்கப் ஆகவில்லை என்றும் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வரும் என்றும் கூறியுள்ளார். 
 

losliya



நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற லாஸ்லியா இலங்கையை சேர்ந்தவர். இலங்கையில் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிக்பாஸில் பங்கேற்றார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது கவினும், லாஸ்லியாவும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டது. இவர்களுடைய காதலுக்கு லாஸ்லியாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதன்பிறகும் கவினுடன் நெருங்கி பழகி வந்தார். கவின் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்றபோது கதறி அழுத லாஸ்லியா, தன்னையும் வெளியேற்றும்படி பிக்பாஸிடம் கெஞ்சினார். இதனால் அவர் கவினை காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று உறுதியானது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு கவினும் லாஸ்லியாவும் தங்களின் காதல் குறித்து வாய் திறக்கவில்லை. பிக்பாஸ் கொண்டாட்டம், பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டி என சந்திக்க இருவருக்கும் பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
 

 

losliya



இதனால் லாஸ்லியா, கவின் முறிந்து விட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் லாஸ்- கவின் காதலுக்கு லாஸ்லியாவின் தந்தை ஓகே சொல்லிவிட்டதாகவும் ஆனால் அவர் ஒரு நிபந்தனையை விதித்திருப்பதாகவும் லாஸ்லியாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது ஓராண்டு கவினும், லாஸ்லியாவும் பேசாமல் பழகாமல் ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிபந்தனையை அவர்கள் சரியாக கடைபிடித்தால் காதலுக்கு சம்மதம் தெரிவிப்பதாக கூறி இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாகதான் இருவரும் வெளியில் பங்கு பெரும் நிகழ்ச்சியில் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படம் வெளியாவதற்கு முன்பே பரிசு - இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
star movie director elan got a plot from producer before a movie release

டாடா பட வெற்றியை தொடர்ந்து 'பியார் பிரேமா காதல்' பட இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின், ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். மேலும் நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார். இரு படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்டார் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதமான மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுவரை படத்தின் 4 பாடல்கள் வெளியான நிலையில் அண்மையில் வெளியான ‘மெலோடி’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கவின் பெண் வேடமிட்டு நடனமாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

star movie director elan got a plot from producer before a movie release

இந்த நிலையில் இயக்குநர் இளனுக்கு தயாரிப்பாளர் பெண்டேலா சாகர் வீட்டு மனை வாங்கி கொடுத்துள்ளார். இதனை இளன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, மகிழ்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஸ்டார் படத்தை பார்ப்பதற்கு முன்பே ஹைதராபாத்தில் எனக்கு ஒரு வீட்டு மனை வாங்கி தந்துள்ள எனது தயாரிப்பாளர் பெண்டேலா சாகருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நான் அவரை படம் பார்க்க அழைத்தபோது, ​​அவர் அதைப் பார்ப்பதற்கு முன்பு எனக்கு பரிசளிக்க வேண்டும் என்று கூறினார்” என பதிவிட்டுள்ளார்.

Next Story

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமீறல் - நீதிமன்றம் அதிரடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
big boss mohanlal issue

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இந்த போட்டியில் வெறுப்பு பேச்சு பேசியதாக குறிப்பிட்டு அதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை பெண்கள், குழந்தைகள் மற்றும் தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான திஷா கேரளா’ அமைப்பு கொடுத்துள்ள நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து போட்டியாளர்கள் தவறாகப் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதே நிகழ்ச்சியில் இன்னொரு சர்ச்சை ஏற்படுள்ளது. 

போட்டியாளர்கள் இருவர் அடிதடியில் ஈடுபட்டனர். இது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைக் கண்டித்து வழக்கறிஞர் ஆதர்ஷ் என்பவர், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர், “மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் மத்திய அரசின் ஆலோசனைகளை மீறி உடல் ரீதியான தாக்குதல் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளனர். அதனால் நிகழ்ச்சி ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காட்சிகளை அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் இருந்து அகற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார். 

big boss mohanlal issue

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதை ஒளிபரப்புவதை தவிர்க்க வேண்டும். உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது.