Skip to main content

உறுதி செய்த தி.மு.க; களம் காணும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்?

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

Again EVKS. Elangovan competition in Erode

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் அனல் அடிக்க ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக இங்கே யார் வேட்பாளராக போட்டியிடுகிறார்கள் என்பதுதான் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. அதிமுக அணியில் வேட்பாளர் யார்? திமுக அணியில் வேட்பாளர் யார் என்பதுதான் இப்போதைய பரபரப்பு. அதிமுக அணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கடந்த தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்டது. அதன்படி இப்போதும் தமாகா போட்டியிடுமா என எதிர்பார்ப்பு எழுந்திருந்தபோது, நேற்று அதிமுக மற்றும் தமாகா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன், “எங்கள் இலக்கு கூட்டணி உறுதியாக வெற்றிபெற வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று காலை அதிமுக ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 

அதேபோல், திமுக கூட்டணியில் காங்கிரஸா திமுகவா என எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில், இத்தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈ.வே.ரா. அவரது மறைவுக்குப் பிறகு தற்போது நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில், காங்கிரஸின் சிட்டிங் சீட் என்பதால் எங்களுக்கே தரவேண்டும் என காங்கிரஸ் கட்சி திமுகவிடம் வேண்டுகோள் வைத்துள்ளது. 

 

கடந்த 2021 தேர்தலில் திமுக சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி. சந்திரகுமார், திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஆ.செந்தில்குமார் ஆகிய இருவரின் பெயர் இறுதிவரை பரிந்துரையில் இருந்த நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திமுக தலைமையிடம் பேசி இறுதியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு திருமகன் ஈ.வே.ரா. போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், இடைத் தேர்தலில் திமுகவுக்கும் வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போது மீண்டும் காங்கிரஸ் கோரிக்கை வைத்ததால் இம்முறையும் காங்கிரசுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

 

அதேசமயம், திமுக தலைமையிடமிருந்து காங்கிரசுக்கு ஒரு வேண்டுகோள் கூறப்பட்டது. இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும், இளங்கோவன் மற்றும் அவரது இளைய மகன் சஞ்சய், மருமகள் பூர்ணிமா இந்த மூவரில் ஒருவர் வேட்பாளராக இருந்தால்தான் தொகுதி மக்களிடம் வாக்குகள் பெற்று நல்ல வெற்றியைப் பெற முடியும் என்பது திமுகவின் எதிர்பார்ப்பு. 

 

இந்நிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்றது. அவருடன் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கோபண்ணா உள்ளிட்டோர் இருந்தனர். இந்த சந்திப்பிற்கு பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடும் என முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 

இந்நிலையில், அநேகமாக திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான். அல்லது அவரது  குடும்பத்தினர் ஒருவர்தான் வேட்பாளராக இங்கு களமிறங்க போகிறார் என்பதும் உறுதியாகத் தெரிகிறது. அதிமுக காங்கிரஸ் என ஈரோடு கிழக்கில் தேர்தல் போட்டி உருவாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.