Skip to main content

அதிமுக கூட்டணி குறித்து விளக்கம் அளிப்பதால் எந்த நெருடலும் இல்லை: அன்புமணி 

Published on 25/02/2019 | Edited on 25/02/2019

 

சென்னை தி.நகரில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், 

 

anbumani ramadoss


2016ம் ஆண்டின் சூழலுக்கு ஏற்ப திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற அவித்தோம். அதிமுக உடனான கூட்டணி குறித்து தற்போது விளக்கம் அளிப்பதால் எந்த நெருடலும் இல்லை. இடைத்தேர்தலில் போட்டியில்லை என்றுதான் கூறியிருந்தோம். யாருக்கும் ஆதரவு இல்லை என்று கூறவில்லை. எங்களுடைய கோரிக்கைகளை பரிசீலப்பதாக கூறியதால் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். நீட், பூரண மதுவிலக்கு விவகாரங்களில் கூட்டணிக்குள் இருந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்துவோம். அடுத்த தேர்தல் நிலைப்பாடு குறித்து தற்போதைக்கு முடிவெடுக்க முடியாது. அதிமுக அமைச்சர்கள் மீது கொடுத்த ஊழல் புகார்கள் குறித்து ஆளுநர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார். 


 

சார்ந்த செய்திகள்