Skip to main content

அதிமுக தோல்விக்கு காரணமான கட்சி!

Published on 08/06/2019 | Edited on 08/06/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கட்சி படுதோல்வி அடைந்தது.இந்த நிலையில் வாக்கு அளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சி.வி. சண்முகம் தோல்வி குறித்தும்,வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் பேசினார்.அப்போது அதிமுக கட்சி இந்த தேர்தலில்  பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா ஆகிய கட்சிகளுடன் இணைந்து இந்த தேர்தலை சந்தித்தது.இந்த தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்று தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறினார். 
 

bjp



நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க. விற்காக யாரும் வாக்களிக்கவில்லை அனைவரும் மத்தியில் ஆட்சி மாறவேண்டும் என்று தான் வாக்களித்தனர். தமிழகத்தை அ.தி.மு.க. தான் ஆட்சி புரியவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர் என்றும் கூறினார்.கூட்டணியில் செய்த தவறை திருத்திக் கொள்கிறோம். அ.தி.மு.க. எப்போதும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும் கூறினார். இந்த தோல்விக்கு காரணம் மோடிக்கு எதிரான நிலை தமிழகத்தில் நிலவியது தான் காரணம் என்று கூறினார்.இதை நான் வெளிப்படையாக கூறுகிறேன் என்றும்  யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார். நாங்கள் இந்த தேர்தலில் தவறான கூட்டணி அமைத்ததின் விளைவாக தான் தோல்வியை சந்திக்க நேரிட்டது.இது போன்ற தவறு இனி வரும் காலங்களில் வராமல் பார்த்துக்கொள்வோம் என்றும் கூறினார்.

சார்ந்த செய்திகள்