Skip to main content

படுதோல்விகளை சந்தித்த கூட்டணி கட்சிகள்... அதிருப்தியில் அதிமுக தலைமை... அப்செட்டான எடப்பாடி!

Published on 03/01/2020 | Edited on 03/01/2020

தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான  உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 30 என  2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று வாக்குகளை எண்ணும் பணி துவங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.இந்த நிலையில்  ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை மாவட்டம் வாரியாக தெரிவித்து வருகின்றனர். 
 

admk



இந்த நிலையில் ஒன்றிய கவுன்சிலர் 5090 இடங்களில் திமுக பெரும்பான்மை இடங்களில் அதிமுகவை விட முன்னணியில் உள்ளது. அதே போல் மாவட்ட கவுன்சிலர் 515 இடங்களில் தற்போதைய நிலவரப்படி திமுக பெரும்பான்மை இடங்களில் முன்னணி வகித்து வருகிறது. ஜனவரி 3ஆம் தேதி (இன்று) 1.00 மணி நிலவரப்படி ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலரில் திமுக 269 இடங்களை பெற்று அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னணியில் உள்ளனர். அதே போல்  ஒன்றிய கவுன்சிலரில் 2318 இடங்களை பெற்று திமுக முன்னிலையில் உள்ளனர். அதிமுக 239 மாவட்ட கவுன்சிலர் மற்றும் 2181 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் அதிமுகவின் கூட்டணி கட்சிகளான பாமக 14, தேமுதிக 4, பிஜேபி 6 மற்றும் இதர கட்சிகள் மாவட்ட கவுன்சிலரில் தற்போது வரை வெற்றி பெற்றுள்ளனர். அதே போல் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 11, மதிமுக 2, இந்திய கம்யூனிஸ்ட் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 ஆகிய இடங்களில் தற்போது வரை மாவட்ட கவுன்சிலரில் வெற்றி பெற்றுள்ளனர். ஒன்றிய கவுன்சிலரில் அதிமுக கூட்டணியில் பாமக 141, தேமுதிக 90, பிஜேபி 81, இதர கட்சிகள் 6 இடங்களிலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் 121, மதிமுக 15, விசிக 5, இந்திய கம்யூனிஸ்ட் 71, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 21 ஆகிய இடங்களிலும் தற்போது வரை வெற்றி பெற்றுள்ளனர். 
 

admk



இதில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போதுமான வெற்றி பெறவில்லை என்று திமுக மற்றும் அதிமுக தலைமைகள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட இடங்களில் உட்கட்சி பூசல் காரணமாக அதிமுக மற்றும் திமுக கட்சியினர் சரியாக களப்பணியில் ஈடுபடவில்லை என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் அதிமுகவில் சொந்த கட்சியினர் செல்வாக்கு இருக்கும் இடத்தில் கூட்டணி கட்சிக்கு அந்த இடங்களை ஒதுக்கியதால் யாரும் வேலை பார்க்கவில்லை என்று சொல்லப்படுகிறது. சொந்த கட்சிக்குள் நடக்கும் உட்கட்சி பூசல் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், எடப்பாடி ஆதரவாளர்கள் என்று இன்னும் கட்சிக்குள் நிலவி வருவதால்  அதிமுக தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர்.  


 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.