Skip to main content

ரீல்ஸ் மோகம்; சாலையில் கட்டுக்கட்டாக பணத்தை பறக்கவிட்ட இளைஞர்!

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

 youth threw money on the road to make instagram reels

 

பரபரப்பான சாலையில் புகுந்த சொகுசு காரிலிருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை எடுத்து அள்ளி வீசும் மர்ம நபரின் வீடியோ காட்சிகள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதிக்கு அருகே உள்ளது கோல்ஃப் கோர்ஸ் சாலை. இது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் பகுதி என்பதால், எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி இரவு 9 மணியளவில், திடீரென அந்த பகுதிக்குள் புகுந்த விலை உயர்ந்த வெள்ளை நிற கார் ஒன்று கோல்ஃப் கோர்ஸ் சாலையில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது, அந்த சொகுசு காரின் டிக்கியில் இருந்து முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர், திடீரென காருக்குள் இருந்த கட்டுக்கட்டான ரூபாய் நோட்டுகளை எடுத்து நடுரோட்டில் வீசினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற வாகன ஓட்டிகள் அந்த காருக்குள் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் சில நொடிகள் திகைத்துப் போனார்கள். இதனால், சிறிது நேரத்திற்கு அந்த இடம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

 

மேலும், இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாகப் பரவத் தொடங்கியது. பின்னர் இதையறிந்த குருகிராம் போலீசார், ‘நடுரோட்டில் ரூபாய் நோட்டுகளை வீசியது யார்? அதற்கான காரணம் என்ன?’ எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்துள்ளனர். அதன்பிறகு சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளை எடுத்து சோதனை செய்ததில் அவை அனைத்தும் போலியானவை எனத் தெரிய வந்துள்ளது. அதே சமயம், சாலையில் ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர் பிரபல யூடியூபரான ஜோரவர் சிங் கல்சி தான் என்பது தெரிய வந்துள்ளது.

 

இதையடுத்து, தலைமறைவாக இருந்த யூடியூபரை கைது செய்த போலீசார், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "சமீபத்தில் வெளியான ‘Farzi' என்கிற வெப் சீரிஸில், நடுரோட்டில் ரூபாய் நோட்டுகளை வீசிச் செல்வது போல் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். அந்த அக்காட்சியை ரீல்ஸ் செய்வதற்காகவே இவர்கள் இச்செயலில் ஈடுபட்டதாக” தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்