Skip to main content

கிராஃபிக்ஸ் ஆணுக்காக வீட்டை விட்டு சென்ற மனைவி... என்றுதான் தீருமோ இந்த டிக்டாக் மோகம்!

Published on 15/12/2019 | Edited on 15/12/2019

அண்மைக்காலமாக டிக் டாக் செயலியின் மூலம் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகள் சம்பந்தமாக பல்வேறு செய்திகள், சம்பவங்கள் தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டிருக்கின்ற சூழலில் கிராபிக்ஸ் மூலம் ஆண் வேடமிட்ட பெண்ணை நம்பி கணவனை மனைவி விட்டுச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் வசித்து வந்த ரவிகுமார் என்பவரின் மனைவி அர்ச்சனா, இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆன நிலையில் 2 மகன்கள் உள்ளனர். இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளின் தாயான அர்ச்சனா பெங்களூரில் பணிபுரியும் அவரது சகோதரியின் தோழியான அஞ்சலி என்பவருடன் டிக்டாக்கில் அறிமுகமாகியுள்ளார்.

 

 Wife who left home for a graphics man ... tik tok incident


இவர்கள் இருவரும் டூயட் பாடல்களுக்கு ஒருவருக்கொருவர் வீடியோக்கள் வெளியீட்டு பழகி வந்துள்ளனர். அதில் அஞ்சலி கிராபிக்ஸ் மூலம் ஆண் போன்ற சிகை அலங்காரங்கள் செய்து கொண்டு அர்ச்சனாவிற்கு வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இந்த நட்பானது அர்ச்சனாவை தேடி அவர் வீட்டுக்கு அஞ்சலி வரும் அளவிற்கு நெருக்கத்தை ஏற்படுத்தியது. அப்படி வீட்டுக்கு வந்த டிக் டாக் நண்பரான அஞ்சலி அர்ச்சனாவின் வீட்டிலேயே ஒரு வாரத்திற்கு மேல் தங்கியதாக கூறப்படுகின்றது.

 

 Wife who left home for a graphics man ... tik tok incident

 

அதேபோல் அவர் தன்னை ஒரு ஆண் போல காட்டிக்கொண்டு கிராபிக்ஸ் மூலம் மீசை தாடி போன்றவற்றைச் செய்து கொண்டு அர்ச்சனாவை மயக்கி காதல் வலையில் வீழ்த்த்தியுள்ளார் அஞ்சலி. இந்த தொடர்பு ஒரு கட்டத்தில் எல்லை மீறியதால் இதை தெரிந்துகொண்ட அர்ச்சனாவின் கணவன் ரவிக்குமார் இனி நீங்கள் இருவரும் சந்திக்கவோ, போனில் பேசிக் கொள்ளவோ கூடாது என கடுமையாக கண்டித்துள்ளார். 

 

 Wife who left home for a graphics man ... tik tok incident

 

மேலும் அர்ச்சனா கையில் உள்ள ஸ்மார்ட் போனையும் பிடுங்கி வைத்துள்ளார். இதனை தெரிந்துகொண்ட அந்த கிராஃபிக்ஸ் ஆண் அஞ்சலி அர்ச்சனாவுக்கு புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை ரகசியமாக வாங்கி கொடுத்து தொடர்ந்து இருவரும் தொடர்பில் இருந்துள்ளனர். இதனை மீண்டும் கண்டுபிடித்துக் கொண்ட கணவன் ரவிக்குமார் மனைவி அர்ச்சனாவை மிகக் கடுமையாக கண்டித்துள்ளார். இந்த பிரச்சனையால் கணவரை விட்டு தாய் வீட்டிற்கு அர்ச்சனா சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

தாய் வீட்டிற்கு வந்த அர்ச்சனா அங்கு வைத்தும் அஞ்சலியுடன் டிக் டாக் வீடியோக்கள் செய்து வெளியிட்டுள்ளார். சம்பவங்கள் இப்படி நடந்து கொண்டிருந்த நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அர்ச்சனா அஞ்சலியை தேடி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

 

 Wife who left home for a graphics man ... tik tok incident

 

அர்ச்சனாவும் இரண்டு குழந்தைகளும் எங்கே உள்ளனர் எனத் தெரியாது தவித்த அர்ச்சனாவின் வீட்டார் இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்க தற்போது போலீசார் அர்ச்சனா அவரது குழந்தைகள் இருவர் மேலும் அஞ்சலி ஆகிய நால்வரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

டிக்டாக்  மூலம் எவ்வளவோ கலாச்சார சீரழிவு பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும் ஆண் போல கிராபிக்ஸ்  வேடமிட்ட பெண்ணை தேடி பெண் சென்ற சம்பவம் சற்று வினோதத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. என்றுதான் தீருமோ இந்த டிக் டாக் மோகம்.

 

 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.