Skip to main content

 வாஜ்பாய் மறைவு; புதுச்சேரியில் அரசு பொது விடுமுறை! 

Published on 17/08/2018 | Edited on 17/08/2018
a


பாஜகவின் முதுபெரும் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் நேற்று மாலை காலமானார். வாஜ்பாய் மறைவையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.   புதுச்சேரி மாநிலத்தில் இன்று  அரசு விடுமுறையும்  அறிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து முதல்வர் நாராயணசாமி கூறும்போது" முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி மத்திய அரசை பின்பற்றி புதுச்சேரியில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் இன் உ (ஆக.17) அரசு விடுமுறை விடப்படுகிறது" என்றார்.


வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏற்கனவே 17ம் தேதி  புதுச்சேரிக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் வாஜ்பாய் இறப்பையொட்டி, புதுச்சேரி மாநிலம் முழுவதும் அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்