Skip to main content

ஆளுநர் மீது காவல் நிலையங்களில் அடுத்தடுத்து கொடுக்கப்படும் புகார்கள்! செய்வதறியாது திகைக்கும் காவல் அதிகாரிகள்!

Published on 20/12/2019 | Edited on 20/12/2019

புதுச்சேரி சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு ஆய்வுகள் என்ற பெயரில் ஆளுநர் கிரண்பேடி சட்டத்திற்கு புறம்பான வகையில் அங்குள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் சிறுவர்களின் புகைப்படங்களை சமுக வளையத்தளத்தில் பதிவிட்டு அந்த மாணவர்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் மன உளைச்சல் ஏற்படும் விதத்தில் செயல்பட்டதாக கிரண்பேடி மீது அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

complaints at police stations over Kiranpedi!


இதுகுறித்து அவ்வமைப்பின் நிறுவனர் சீ.சு.சுவாமிநாதன் தலைமையில், பொதுச்செயலாளர் முருகன், அதனுடன் இந்திய தேசிய இளைஞர் முன்னணி(INYF) தலைவர் கலைப்பிரியன் பொதுச்செயலாளர் தாமரை கண்ணன், நகர தலித் பாதுகாப்பு இயக்க தலைவர் பிரகாஷ்,மற்றும் செல்வகுமார், புதுச்சேரி மக்கள் நலவாழ்வு நற்பணி இயக்க தலைவர் ராஜா அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

 

complaints at police stations over Kiranpedi!


கடந்த மாதம் 06.11.2019 அன்று மாணவர் கூட்டமைப்பிற்கு  புகார் கடிதம் ஒன்று வந்தது. அந்த புகார் கடிதம் பெயர் ஆதாரம் எதுவும் குறிப்பிடாமல் தனது மகன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் படிப்பதாகவும், அந்த தகவல் தன் குடும்பத்தினர் யாருக்கும் தெரியாதெனவும் குடும்பச் சூழ்நிலை காரணமாக மூன்று வேலை உணவோடு தனது மகன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் நல்ல கல்வி அடைவதை விரும்பி தன் மகனை  சிறுவர் சீர்திருத்த பள்ளியில் படிக்க வைத்து வருவதாகவும் எழுதப்பட்டிருந்தது.

இந்த பள்ளியை ஆய்வு என்ற பெயரில் சென்ற ஆளுநர் கிரண்பேடி  அந்தப் பள்ளியில் இருக்கும் மாணவர்களோடு புகைப்படம் எடுத்து அதனை கிரண்பேடி என்ற தனி நபர் ட்விட்டர் போன்ற இணைய தளங்களில் பதிவிட்டதனால் தன் மகன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தங்கி படிப்பது தனது வாழும் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் மற்றவர்களுக்கும் தெரிந்ததாக புகார் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

 

complaints at police stations over Kiranpedi!


இந்த குற்றச்சாட்டுகள் உண்மையானைவையா? என்பதை ஆராய ஆளுநர் கிரண்பேடி ட்விட்டர் பக்கத்தினுள் சென்று பார்த்தபோது ஆளுநர் கிரண்பேடி  ஆய்வு மேற்கண்ட போது சிறுவர்களோடு எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் 21 / 22.01.2018 தேதியில் பதிவிட்டுள்ளார். மேலும்  சிறுவர் சீர்திருத்த பள்ளி ஆய்வு என்ற பெயரில் ஆளுநர் கிரண்பேடி தனக்கு பாதுகாவலர்களாக உள்ள பாதுகாப்பு அதிகாரிகளை சீருடையோடு சீர்திருத்த பள்ளி வளாகத்திற்குள்  அழைத்து சென்றுள்ளார். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் பயிலும் மாணவர்களை இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி எவ்வாறு கையாள வேண்டும் என்ற பல்வேறு விதிமுறைகள் இருப்பதை அனைவரும் அறிவார்கள்.

ஆளுநர் கிரண்பேடி  காவல்துறையின் உயரிய பொறுப்பில் பதவி வகித்தவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருந்தும் கூட சிறுவர் சீர்திருத்த பள்ளி மாணவர்களோடு  எடுத்த புகைப்படங்களை பொது தளத்தில் வெளியிட்டது மட்டுமல்லாமல் நாளிதழ் செய்தி ஊடகங்களுக்கும் அளித்துள்ளார். மேலும், இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளின் படி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் பயிலும் மாணவர்களை புகைப்படம் எடுக்கவோ, அந்த புகைப்படத்தை வெளியிடவோ  அல்லது Juvenile  அவர்களின் அடையாங்களை வெளியிட The Juvenile Justice (care and protection of Children) Act, 2015-யின்படி தடை உள்ளது. அவ்வாறு தடையை மீறி வெளியிட்டால் அது தண்டணைக்குறிய குற்றமாகும் என்று  சட்டத்தில் உள்ளது. மேலும் ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு அலுவல் மூலமாக பெற்ற தகவல்களை, அவரின் தனிப்பட்ட சமூக ஊடகத்தில் பொது மக்கள் பார்வைக்கு வெளியிட்டது அரசின் தகவல்களை விதிமுறைகளுக்கு எதிராக அத்து மீறியதாகும். இருந்தபோதும் ஆளுநர் கிரண்பேடி, சம்பந்தப்பட்ட துறையிடம்  உரிய அனுமதி ஏதேனும் பெறப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய கடந்த 08.11.2019 அன்று தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் அவ்வாறு புகைப்படம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டதா  என தகவலை அறிந்தபோது கடந்த 5 ஆண்டுகளில் அவ்வாறு அனுமதி கோரி சமூக நலத்துறையில்  எவரும் விண்ணப்பிக்க வில்லை என்ற தகவலை தந்துள்ளனர்.

சமீபத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும் அரசு அதிகாரத்தில் உள்ள நபர்கள் பொதுதளத்தில் இதுபோன்ற தகவல்களை தெரிவிக்க கூடாது என நீதிமன்ற தீர்ப்பு இருந்தும் அவ்வாறு அரசு ஆவணங்களை பொது தளத்தில்  பதிவிட்டதற்கு எதிராக பெரியக்கடை காவல்நிலையத்தில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மீது புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வழக்கு கொடுக்கப்பட்டது,

ஆனால் எந்த ஒரு விசாரணையும்  நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில். ஒரு பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தையின் தாய் தனது குடும்பம் பாதிக்கப்பட்டதை  கடிதமாக எழுதியுள்ளது வேதனையளிப்பதோடு, மேலும் இதனால்  படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் நற்சான்றிதழ் தொடர்பான எதிர்காலமும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே ஆளுநர் கிரண்பேடி மீது வழக்கு பதிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.

 

complaints at police stations over Kiranpedi!


இதேபோல் கடந்த 15/12/2019 அன்று கார்நாடக மாநிலம்,கல்லட்கா நகரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நடத்தப்படும் ஸ்ரீ ராம் வித்ய கேந்திர பள்ளியில் நடைபெற ஆண்டு விழாவில்1992-ஆம் ஆண்டு சட்ட விரோதமாக  இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் நிகழ்வை 4000 மாணவர்கள் மத்தியில் மீள்உ௫வாக்கம் செய்து காட்டப்ப்படுள்ளது என்றும், அந்த நிகழ்வில் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி  கலந்துகொண்டு அந்நிகழ்வை ஊக்குவித்து மாணவர்களின் இடையே மத நல்லிணக்கத்தை  சீர் குலைக்கும் விதத்தில் செயல்பட்டதால் கிரண்பேடி மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க கோரி  மனித நேய மக்கள் கட்சி  சார்பில் பெரிய கடை காவல் நிலையத்திலும், இந்திய தேசிய இளைஞர் முன்னணி சார்பில் கோரிமேடு காவல் நிலையத்திலும்  புகார்கள்  கொடுக்கபட்டுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புதுச்சேரி மாநிலத்திற்கு அவமானத்தையும்,  நாட்டின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் செயல்களில் கவர்னர் ஈடுபடுவதை கண்டிக்க வேண்டும். மத்திய அரசு கிரண்பேடியை உடனே பதவியில் இருந்து நீக்க வேண்டும். புதுவை அரசும் கவர்னர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.