Published on 20/04/2021 | Edited on 20/04/2021

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறி ஏற்பட்டதால் கரோனா பரிசோதனை செய்துகொண்ட அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, சமீபத்தில் தன்னோடு தொடர்பில் இருந்தவர்களை, பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைபிடிக்குமாறும், பாதுகாப்பாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.