Skip to main content

30 நாட்களில் 82 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி - சுகாதாரத்துறை அமைச்சகம்!

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

fg

 

2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக, உருமாறிய கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் பல நாடுகள், முழு ஊரடங்கை அமல்படுத்திக்கொண்டிருக்கின்றன.

 

இந்நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் கடந்த 30 நாட்களில் 82.85 லட்சம் பேருக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கரோனா தடுப்பூசிகள் விலை குறைப்பு!

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Corona vaccine price reduction!

 

நாடு முழுவதும் நாளை (10/04/2022) முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் எனப்படும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், அவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

 

தனியார் மருத்துவமனைகளும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையைக் குறைத்துள்ளனர். அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸுக்கு ரூபாய் 600 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ரூபாய் 225 ஆக சீரம் இன்ஸ்டிடூட் ஆஃப் இந்தியா குறைத்துள்ளது. இதேபோல், கோவாக்சின் மருந்தின் விலையையும் ரூபாய் 1,200- லிருந்து ரூபாய் 225 ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்து நிர்ணயித்துள்ளது. 

 

இதனுடன் மருத்துவமனைகள் சேவைக் கட்டணமாக, ரூபாய் 150 வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

 

Next Story

தடுப்பூசியின் முக்கியத்துவம்: திருச்சி மருத்துவர் விளக்கம்

Published on 19/01/2022 | Edited on 19/01/2022

 

Importance of vaccine: Trichy doctor explanation

 

திருச்சியைச் சேர்ந்த அவசர சிகிச்சை நிபுணர் மருத்துவர் முகமது ஹக்கீம் தடுப்பூசியின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். அதில் அவர் தடுப்பூசியின் அவசியத்தைக் கொண்டு செல்லும் விதமாக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மூன்றாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருவதால் பாதுகாப்பிற்காக உலக சுகாதார அமைப்பும், சுகாதார அமைச்சகமும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வலியுறுத்தி வருகின்றன. 

 

தடுப்பூசி எனப்படுவது நோய் கிருமியின் செயலிழக்கபட்ட ஒரு சிறிய பாகத்தினை உடலில் செலுத்தி, அதனால் உடல் எதிர்ப்பு ஆண்டிபாடிகளை உற்பத்தி செய்து தயார் நிலையில் வைத்திருப்பது. நோய் கிருமி தாக்குதல் ஏற்படும்போது தாயாராக உள்ள ஆண்டிபாடிகள் அவற்றை அழித்து விடும். ஒவ்வொரு தடுப்பூசிக்கும் ஒவ்வொரு விதமான ஆயுட்காலம் உண்டு, கரோனா தடுப்பூசி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் பொழுதே அதன் ஆயுட் காலம் சில மாதங்கள் என அறிவியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

 

நோய் கிருமி மரபணு உருமாற்றம் அடைவதனால் ஏற்படும் விளைவுகளே இந்தப் புது புது அலைகளுக்கு காரணம். உருமாற்றம் அடைந்து இருந்தாலும் மூலக்கூறு ஒன்று போல இருப்பதனால் இந்த உருமாற்றத்திற்கு எதிராக இந்தப் பூஸ்டர் தடுப்பூசி நன்கு வேலை செய்கிறது.  இந்தத் தடுப்பூசி/ பூஸ்டர் ஊசி எடுத்துக் கொள்வதால் சுமார் 85% மேற்பட்ட மக்கள் லேசான அறிகுறிகளுடன் நோய் ஏற்பட்டு, எளிதில் மீழ்கின்றனர்.

 

கரோனா நோயால் தீவிர சிகிச்சைப் பகுதியில் சேர்க்கப்படுபவர்களில் பத்தில் ஒன்பது நபர்கள் தடுப்பூசி எடுத்து கொள்ளாதவர்கள். எனினும் மரபணு மாற்றத்தால் ஏற்படும் இந்த ஒமிக்ரான் தொற்று இணை நோய், துணை நோய் உடையவர்களையும், வயோதிகர்களையும் அதிகம் பாதிப்பதாக மருத்துவ உலகம் கூறுகிறது. எனவே சமூக இடைவெளி, முகக் கவசம், கிருமி நாசினி, கூட்டங்களைத் தவிர்ப்பது போன்ற கோவிட் சமூக நெறிகளைக் கடைபிடிப்பது கட்டாயமாகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.