Skip to main content

தொடர் ஏற்றத்தில் பங்குச்சந்தைகள்! இன்று என்ன நடக்கும்?

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

mumbai sensex, nifty sharemarket

 

இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக, நேற்றும் (ஜூலை 6) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தன. சொல்லப் போனால் கடந்த நான்கு மாதங்களில் இண்டெக்ஸில் புதிய உயரத்தைப் பதிவு செய்திருக்கின்றன எனலாம்.

 

மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 466 புள்ளிகள் / 1.29% வரை உயர்ந்து 36,487.28 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 156 புள்ளிகள்/ 1.47% ஏற்றம் கண்டு, 10,763.65 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தது.

 

நேர்மறையான பேரியல் பொருளாதார தரவு மற்றும் கரோனா தடுப்பூசிகள் குறித்த நம்பிக்கையான செய்திகளால் நடப்பு ஆண்டு எதிர்பார்க்கப்படும் பொருளாதார மந்த நிலையில் இருந்து உலகப் பொருளதாரம் மீண்டும் முன்னேறும் என்ற உணர்வு முதலீட்டாளர்களிடம் அதிகரித்துள்ளது.

 

உள்நாட்டுத் தரப்பில் பார்த்தோமேயானால், ஹெச்.டி.எப்.சி. வங்கியிடம் இருந்து வலுவான கடன் வளர்ச்சி குறித்த தகவல்களும், இந்தியா- சீனா இடையேயான பதற்றத்தை எளிதாக்குவதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளும் முதலீட்டாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. 

 

எனினும்,‘’கரோனா பாதிப்பில் உலகளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த இந்தியா போராடிய போதும், பங்குச்சந்தைகள் கடந்த நான்கு மாதத்தில் இல்லாத வகையில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது என்கிறார் கெம்கா. குறுகிய கால வேகம் சாதகமாக இருந்தபோதிலும், வர்த்தகர்கள் சரியான இடைவெளியில் லாபத்தை புக்கிங் செய்வது நல்லது,'' என்றும் கூறுகிறார் மோதிலால் ஓஸ்வால் சில்லரை வர்த்தக ஆராய்ச்சிப்பிரிவுத் தலைவர் கெம்கா.

 

சந்தை இன்று எப்படி இருக்கும்?:

 

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவீதமாகக் குறையும் என்று தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அதன் தாக்கம் பங்குச்சந்தைகளிலும் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது. நிப்டி இன்று (ஜூலை 8) இறங்குமுகத்தில் சென்றால் 10,702 - 10,640 புள்ளிகளாக அதன் ஆதரவு நிலை இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இண்டெக்ஸ் மேல்நோக்கி செல்லுமெனில், இண்டெக்ஸ் 10,818- 10,873 புள்ளிகளில் வர்த்தகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நம்பிக்கை அளிக்கும் வங்கிப் பங்குகள்: 

 

நேற்றைய (ஜூலை 6) நிலவரப்படி, நிப்டி வங்கிக் குறியீட்டு எண் 1.59 சதவீதம் அதிகரித்து 22,198.95 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. ஒருவேளை, இன்று வங்கிப் பங்குகள் சரிந்தாலும் 22,113- 22,028 புள்ளிகள் என்ற அளவில் இருக்கும். ஏற்றம் காணும்பட்சத்தில் 22,341- 22,484 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெறலாம் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள். 

 

இன்று முடிவுகள் வெளியிடும் நிறுவனங்கள்:

 

ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ், ஜி.கே.பி. ஆப்தால்மிக்ஸ், பஸல் இண்டர்நேஷனல், பெஸ்ட் அக்ரோலைப், பெஸ்ட் ஈஸ்டர்ன் ஹோட்டல்ஸ், பந்தேரி இன்ப்ராகான், இண்டியன் அக்ரிலிக்ஸ், மார்க் டெக்னோ புராஜக்ட்ஸ், பாலிமாக் தெர்மோபார்மர்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஜனவரி- மார்ச் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிடுகின்றன. இதன் அடிப்படையில் இந்நிறுவனப் பங்குகளின் முதலீடுகளில் ஏற்றம், இறக்கம் காணப்படும்.

 

http://onelink.to/nknapp

 

வாங்குவதற்கு ஏற்ற பங்குகள்:

 

ஐ.டி.ஐ., பாரத் டைனமிக்ஸ், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ், ஐ.டி.பி.ஐ. வங்கி, ஆர்.ஐ.எல். ஆகிய பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் நேற்று வாங்கிக் குவித்தனர். இன்றும் இப்பங்குகளுக்கு வரவேற்பு இருக்கும் எனத் தெரிகிறது. பிசி பவர் கன்ட்ரோல்ஸ், ஓமாக்ஸ் லிமிடெட் ஆகிய பங்குகள் கடந்த 52 வாரத்தில் சந்தித்திராத சரிவைச் சந்தித்ததால் அப்பங்குகளை விற்றுவிடலாம் என்கிறார்கள் நிபுணர்கள். 

 

ஒட்டுமொத்த அளவில், நிப்டி மற்றும் சென்செக்ஸில் காளையின் ஆதரவுப் போக்கே நிலவுவதால் இன்றும் முதலீட்டாளர்களிடையே உற்சாகத்திற்குக் குறைவிருக்காது என்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ரசிகர்களுக்கு தடியடி - சல்மான் கான் வீட்டில் பரபரப்பு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
police lathi charge in Salman Khan fans

ரமலான் பண்டிகை இன்று (11.04.2024) கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவித்திருந்தார். அதன்படி இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் காலை முதலே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ரமலான் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மற்றும் தனது பிறந்தநாளின் வீட்டின் முன் கூடியிருக்கும் ரசிகர்களைச் சந்திப்பார் சல்மான் கான். அந்த வகையில் இன்று மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டின் முன்பு, ரமலான் வாழ்த்து பெற அவரது ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் கூடியிருந்தனர். அப்போது அவர்கள் ஆரவாரம் செய்து கூச்சலிட்டனர். அவர்களால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அவர்களை தடியடி நடத்தி போலீஸார் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

சல்மான் கான், தற்போது ஏ.ஆர் முருகதாஸுடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தை சஜித் நதியாத்வாலா தயாரிக்க அடுத்த ஆண்டு ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியான நிலையில், ரமலான் நாளான இன்று படத்திற்கு சிக்கந்தர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.