Skip to main content

மருத்துவமனையில் தீ விபத்து - 13 பேர் பலி!

Published on 23/04/2021 | Edited on 23/04/2021

 

maharashtira state hospital patients incident police investigation

 

மஹாராஷ்ட்ரா மாநிலம், பல்கார் மாவட்டத்தில் வசாய் விரார் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், கரோனா சிகிச்சை மையத்தின் ஐ.சி.யூ. பிரிவில் இன்று (23/04/2021) அதிகாலை 03:15 மணிக்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 கரோனா நோயாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கரோனா நோயாளிகள் சிலரை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். மேலும், மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

maharashtira state hospital patients incident police investigation

 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாநில வரிசையில் மஹாராஷ்ட்ரா முதலிடம் வகிக்கும் நிலையில், ஏற்கனவே நாசிக்கில் வாயு கசிவு காரணமாக திடீரென ஆக்ஸிஜன் நிறுத்தப்பட்டதால் 24 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள விபத்துகளால் அம்மாநில மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்