Skip to main content

ஹோட்டல் உரிமையாளர் துண்டு துண்டாக வெட்டி கொலை; பெண் உட்பட மூவர் கைது

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

kerala malappuram hotel owner and dismissed labour related incident 

 

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம்  திரூர் நகரைச் சேர்ந்தவர் சித்திக் (வயது 58). இவர் கோழிக்கோடு எலத்திபாலம் என்ற பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரை கடந்த சில நாட்களாக காணவில்லை என அவரது மகன் போலீசில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். மேலும் போலீசாரின் தொடர் விசாரணையில் சித்திக் வங்கிக் கணக்கில் இருந்து மிகப்பெரிய தொகை  ஏடிஎம்மில் இருந்து எடுக்கப்பட்டது தெரியவந்தது.

 

இந்நிலையில் பாலக்காட்டை அடுத்துள்ள அகளி வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பிறகு போலீசார் அங்கு சென்று சூட்கேஸைத் திறந்து பார்த்துள்ளனர்.அப்போது போது அந்த சூட்கேஸில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம்  இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் காணாமல் போன சித்திக் தான் இது என்று போலீசார் உறுதி செய்தனர்.

 

போலீசார் சந்தேகத்தின் பேரில் சித்திக்கின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுடன் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது சித்திக்கின் ஹோட்டலில் வேலை செய்து வந்த  சிபில் (வயது 36) மற்றும் பர்ஹானா (வயது 34) ஆகியோர் மாயமாகி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை தீவிரமாக போலீசார் தேடி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சென்னையில் இருப்பதை போலீசார் அறிந்து கொண்டனர். அதனை தொடர்ந்து  சாதுர்யமாக செயல்பட்டு இருவரையும் கைது செய்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சித்திக்கை கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். 

 

இவர்கள் இருவரும் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "கடந்த 18ஆம் தேதி ஓட்டல் உரிமையாளர் சித்திக் எங்கள் இருவரையும் வேலையில் இருந்து நீக்கி விட்டார். அதனால் அவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்து வந்தோம். மேலும் அவரிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கில் கடந்த 23 ஆம் தேதி சித்திக்கை கடத்தி கோழிக்கோட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றோம். பின்னர் அங்கு வைத்து அவரை கொலை செய்து உடல் பாகங்களை துண்டு, துண்டாக வெட்டினோம். பின்னர் அவரது உடலை சூட்கேசில் வைத்து அகளி வனப்பகுதியில் வீசி சென்றோம்" என தெரிவித்தனர். இவர்களுக்கு உடந்தையாக பர்ஹானாவின் தம்பி ஆஷிக் என்பவரும் இருந்துள்ளார். இதையடுத்து அவரையும்  கைது செய்த போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையின் போது இவர்கள் இருவரும் அளித்த வாக்குமூலம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.