Skip to main content

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு; 507 பேர் பலி!

Published on 22/07/2021 | Edited on 22/07/2021

 

hj


இந்தியாவைப் பொறுத்தமட்டில் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கரோனா வேகமாகப் பரவிவந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,383 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 507 பேர் இந்த நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நோய்த் தொற்றிலிருந்து நேற்று (21.07.2021) ஒரே நாளில் 38,652 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் நாடு முழுவதும் இதுவரை 3.12 கோடி பேர் நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று 3.04 கோடி பேர் நோய் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 4.09 லட்சம் பேர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்