Skip to main content

டிராக்டர் ஓட்டிய செங்கோட்டையன்... -''ஆக, அடுத்து இதுதான்...'' -ர.ர.க்கள் கமென்ட்

Published on 06/08/2020 | Edited on 06/08/2020
K. A. Sengottaiyan

 

 

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து மாநில அரசு நிபுணர் குழு அமைத்து கருத்து கேட்ட பிறகு என்ன செய்வது என செயல்படுத்தபடும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். 

 

ஜூலை 5ந் தேதி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குருமந்தூர்மேட்டில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விழா நடைபெற்றது. அதில் குள்ளம்பாளையம் ஒடையாக்கவுண்டன்பாளையம் என நான்கு ஊராட்சிகளில் உள்ள மகளிர் கூட்டமைப்பினர்களுக்கு டிராக்டர் உட்பட வேளாண் கருவிகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். அதனை தொடர்ந்து, அயலூர் செம்மாண்டம்பாளையம் ஆரம்பசுகாதாரநிலையத்தில் குடிநீர் திட்டத்தையும் கூட்டுதல் படுக்கை வசதி அறைகளையும் திறந்துவைத்தார். 

 

K. A. Sengottaiyan

 

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 தொலைக்காட்சிகள் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் திட்டத்தை நேற்று முன்தினம் முதல்வர் தொடங்கிவைத்துள்ளார். மேலும் இரண்டு தொலைக்காட்சிகளில் பாட வகுப்புகள் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அரசு வேண்டுகோளை ஏற்று விளம்பரம் இல்லாமல், தொலைக்காட்சி நிறுவனங்கள் தன்னலம் கருதாது நேரம் ஒதுக்கியதற்கு நெஞ்சார்ந்த நன்றிகள். கியூஆர் கோடு மூலம் கல்வியில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. 

 

அதேபோல் புதிய கல்விக்கொள்கையில் அரசின் சார்பில் என்ன நடைமுறைப்படுத்தலாம் என்கிற யோசனையில் நிபுணர் குழு அமைத்து கருத்து கேட்ட பிறகு என்ன செய்வது என அவை செயல்படுத்தபடும். கஸ்தூரி ரங்கன் கமிட்டி மாநிலங்களில் கருத்து கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர் ஆலோசனையுடன் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளதாவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

 

மகளிர் குழுக்களுக்கு டிராக்டர் வழங்கியபோது ஒரு டிராக்டரில் ஏறி அதை ஸ்டார்ட் செய்த செங்கோட்டையன் சிறிது தூரம் ஒட்டினார். டிராக்டர் பின்னால் ஓடி வந்த கட்சி நிர்வாகிகள், ''அண்ணே இதே போல் வயக்காட்டில் ஒட்டுவீங்களா?'' என கிண்டலாக கேட்க, ''அட என்னப்பா அடுத்த எலெக்ஷனுக்குப் பிறகு வயக்காட்டுல தான் அண்ணனுக்கு வேலையே...'' என மற்றுமொரு நிர்வாகி பதில் கொடுத்து கலகலப்பூட்டினார். ஆக, செங்கோட்டையனின் அரசியல் வாழ்வு இந்த அரசின் காலகட்டம் வரைக்கும்தான் என உள்ளுர் நிர்வாகிகளே நம்பிக்கையோடு உள்ளார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.