Skip to main content

"டாக்டர் சைமனின் ஆசையை அரசு நிறைவேற்றாதது துரதிர்ஷ்ட்டமானது" -முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் அதிரடி 

Published on 25/04/2020 | Edited on 25/04/2020

 

கரோனா தாக்குதலில் மரமணடைந்த டாக்டர் சைமனின் உடல் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய முடியாத சூழலில் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கத்திற்கு எழுந்த எதிர்ப்புகளை சமாளித்து உடலை அடக்கம் செய்தனர் மாநகராட்சி அதிகாரிகள். இதனால் ஏற்பட்ட சர்ச்சைகள் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


  devasahayam

 

இந்த சூழலில், "கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில்  தனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டுமென எனது கணவர் விரும்பினார். அவரது ஆசையை  அரசு நிறைவேற்ற வேண்டும்" என சைமனின் மனைவி ஆனந்தி வேண்டுகோள் வைத்திருந்தார். 

 

Nakkheeran app



சைமனின் ஆசையை நிறைவேற்ற அவரது உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு எதிரொலிக்கச் செய்தது. இந்த நிலையில், 'டாக்டர் சைமனின் கோரிக்கையை ஏற்க இயலாது' என மறுத்து ஒரு விளக்க அறிக்கையைத் தந்திருக்கிறது சென்னை மாநகராட்சி நிர்வாகம். 

 

gg


இது, கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது குறித்து நம்மிடம் பேசிய ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம், "கிறிஸ்தவ சடங்குகளின்படி மருத்துவருக்கு ஏற்கெனவே நல்ல அடக்கம் வழங்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சியின்  கருத்து உண்மைகளின் அடிப்படையில் சொல்லப்படவில்லை. 
 

கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தின் நிர்வாகம் ஒப்புதல் தந்திருக்கும் நிலையில், டாகடர் சைமனின் உடல் மீண்டும் அடக்கம் செய்வதற்கு  நிராகரிக்கப் பட்டதற்கான காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை ;  நம்பமுடியாதவை !  கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவ கல்லறை அதிகாரிகள் அடக்கத்தினை  ஆதரித்தபோதும் மாநகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக அதை நிராகரிப்பது நியாயமற்றது.  
 

ஆனந்தி சைமனின் உண்மையான வேண்டுகோளை நிறைவேற்ற தமிழக அரசு முன் வராததது துரிதிர்ஷ்டமானது. சைமனின்  உடல் அடக்கத்தில் நிறைய அரசியல் இருக்கிறது. வெளிப்புற காரணங்களாலேயே ஆனந்தி சைமனின் கோரிக்கையை நிராகத்திருக்கிறார்கள்.  மதசார்பற்ற ஜனநாயக நாட்டில் தமிழக ஆட்சியாளர்களின் முடிவுகள் துரதிர்ஷ்டமாக இருக்கின்றன. ஆனந்தியின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மாநகராட்சியின் உத்தரவை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். கோரிக்கையை   மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்கிறார் எம்.ஜி.தேவசகாயம்.

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.