Skip to main content

கொலையா; தற்கொலையா? - வட மாநிலத் தொழிலாளி மரணத்தில் நக்கீரன் கள ஆய்வு

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

Sivakanchipuram issue Nakkheeran Field report

 

த்தம் கேட்டு வந்த தொழிலதிபர் மோகனின் மகன் ஜீவன் மற்றும் அவர்களின் ஊழியர்களுடன் சேர்ந்து அந்த மர்ம நபரைப் பிடித்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்து மயங்கி கீழே விழ... இதுகுறித்து சிவகாஞ்சிபுரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸ் எஸ்.ஐ. மகேந்திரன், வட மாநிலத்தவரைப் போலிருந்த அந்த மர்ம நபர், குற்றுயிரும் குலையுயிருமாக இருந்ததால், உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

 

இதையடுத்து போலீசார், அந்த மர்ம நபர் வலிப்பு வந்து இறந்ததாகவும், சம்பவம் நடந்த வீட்டுக்கு வெளியே ராதா பார்ட்டி ஹால் அருகே மயங்கிக் கிடந்ததாகவும், சிகிச்சைக்காக போனபோது அவர் இறந்துவிட்டதாகவும், தற்போது காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அவருடைய பிணம் இருப்பதாகவும், அந்த நபரைப் பற்றிய விவரம் தெரிந்தால் சிவகாஞ்சிபுரம் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளருக்கு தகவல் கொடுக்கும்படி, காஞ்சிபுரம் முழுக்க போஸ்டர் ஒட்டி, இந்த கொலை வழக்கை இயற்கை மரணமாக மாற்றிவிட்டனர் என்றும், இதற்கென பெருந்தொகை வாங்கியுள்ளனர் என்றும் பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர் நக்கீரனுக்கு தகவலாகக் கொடுத்தார்.

 

இதையடுத்து, இவ்விவகாரம் குறித்து விசாரிக்க நக்கீரன் களமிறங்கியது. சம்பவம் நடந்த இடத்திற்கு அருகாமையிலிருந்த ராதா பார்ட்டி ஹால் வாட்ச்மேன் மணியிடம் இதுகுறித்து விசாரித்தோம். “ஆமாங்க அன்னைக்கு போலீஸ் நிறைய பேர் வந்திருந்தாங்க, ஆம்புலன்ஸ் வந்துச்சு, யாரோ ஒரு ஆளு மோகன் சார் வீட்ல திருடப்போனதாகவும், அப்ப துரத்தியபோது கீழ விழுந்து அடிபட்டதாகவும் சொன்னாங்க” என்று மட்டும் கூறினார்.

 

Sivakanchipuram issue Nakkheeran Field report

 

இதுதொடர்பாக தொழிலதிபர் மோகனின் மகன் ஜீவனிடம் பேசினோம். “சார் யாரும் கொலையெல்லாம் பண்ணல. என்ன சார் காமெடி பண்றீங்க. அன்னைக்கு வீட்டுக்கு யாரோ தெரியல, வடநாட்டுக்காரன் மாதிரி இருந்தான். மாடி ஏறி வந்தான், கீழே கொண்டு வந்துவிட்டு, போலீஸுக்கு ஃபோன் செய்தேன். அதுக்குள்ள மயக்கம் போட்டு விழுந்துட்டான். 108 ஆம்புலன்ஸுக்கு நான்தான் ஃபோன் பண்ணேன். வந்ததும் ஏத்தி அனுப்பி வச்சேன். நான் அடிச்சு கொன்னுட்டேன்னு சொல்றீங்களே? என்ன சார் நியாயம்?” என்று படபடத்தபடி தொடர்பைத் துண்டித்தார். ஜீவன், சம்பவம் நடந்த பழைய ரயில்வே ரோட்டில் திருமலா டிஎம்டி என்ற ஹார்ட்வேர்ஸ் கடையை அவருடைய அப்பாவோடு சேர்ந்து கவனித்து வருகிறார். அங்கே நேரில் சென்று கேட்டபோது இருவரும் வெளியே சென்றுள்ளதாகக் கூறினார்கள்.

 

சம்பவம் தொடர்பாக தொழிலதிபர் மோகனை தொடர்பு கொண்டோம். ஃபோனை எடுத்த பெண் ஒருவர், “என்ன விஷயம்” என்று கேட்டார். “போன ஏப்ரல் 15 ஆம் தேதி உங்க வீட்டுக்கு ஒரு திருடன் வந்ததாகவும், அவனை நீங்கள் அடித்ததால் செத்துப் போனதாகவும் சொல்கிறார்களே?” என்று கேட்டோம். அதற்கு அந்த பெண் “நாங்க அடிச்சதால அவன் செத்துட்டானா?” என்று கேட்டபடி, மோகனிடம் கொடுத்தார். அவரோ, “சார் எதுவா இருந்தாலும் நேர்ல வாங்க, ஃபோன்ல எல்லாம் பேச முடியாது” என்றபடி தொடர்பைத் துண்டித்தார்.

 

சம்பவம் தொடர்பாக சிவகாஞ்சிபுரம், காவல் ஆய்வாளர் விநாயகத்திடம் பேசினோம். “அங்க ஒருத்தர் இறந்து போனார் என்பது உண்மை. ரொம்ப உடம்பு சரி இல்லாததாலன்னு தகவல் வந்துச்சு. போஸ்டர்லாம் ஒட்டி அவரைப்பத்தி விசாரிச்சிட்டு வர்றோம். உடனே கொலைன்னு சொல்ல முடியாது. நாங்க விசாரிச்சு அப்படியிருந்தா கைது செய்வோம்” என்று தொடர்பை துண்டித்தார். சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் எஸ்.பி. சுதாகரை செல்போனில் தொடர்பு கொண்டபோது எடுக்கவேயில்லை. இது தொடர்பாக வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணனை தொடர்பு கொண்டோம். "இவ்வழக்கு தொடர்பாக உடனடியாக விசாரிக்கச் சொல்கிறேன்'' என்று உறுதியளித்தார்.

 

Sivakanchipuram issue Nakkheeran Field report

 

மேலும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பிணவறை ஊழியரான முருகனிடம் ரகசியமாகக் கேட்டோம். “பாவம் சார். இந்திக்காரன் போல இருக்கு. செத்து 30 நாள் ஆச்சு. இன்னும் இவனோட சொந்தக்காரன் யாரும் வந்து பாடிய வாங்கல. என்ன பண்ணி சாவடிச்சான்னு தெரியல. பிழைப்பத் தேடி வராங்க. இதுபோல கொலை செஞ்சாக்கூட கேட்க நாதியில்லாம அனாதைப் பொணமா போறாங்க” என்று புலம்பினார். குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டிய காவல்துறையே ஒரு கொலையை இயற்கை மரணமாக மாற்ற முயன்றிருப்பதை உணர முடிந்தது.

 

இந்நிலையில் இவ்விவகாரம் பெரிதாவதை உணர்ந்தவர்கள், 20 நாட்களாகக் கேட்பாரற்று இருந்த உடலை எடுத்துச் சென்று தகனம் செய்துவிட்டனர். இதன்மூலம் இவ்விவகாரத்தில் உண்மை சாம்பலாக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது