Skip to main content

420 கோடி மோசடி... சிக்கிய மந்திரி நண்பர்... பயத்தில் அதிமுக அமைச்சர்!

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

மத்திய அரசின் ஏஜென்சி ஒன்று, வெளிமாநில தலைமையகத்திலிருந்து வந்து மாநில அமைச்சருக்கு நெருக்கமான ஒருவரை கைது செய்து வெளிமாநில சிறையிலடைத் திருக்கிறது. அன்னை இன்ப்ரா என்பது கம்பெனியின் பெயர். இந்த கம்பெனி ஆந்திராவிலும் தமிழகத்திலும் சாலைகள் போடுவது, அணைகள் கட்டுவது போன்ற வேலைகளை செய்து வருகிறது. பொதுவாக இந்தப் பணிகளில் ஊழல் அதிகம். அதனால் கணக்கு காண்பிப்பதற்காக போலி பில் போடுவது சகஜம். நூறு ரூபாய் செலவு செய்துவிட்டு முன்னூறு ரூபாய்க்கு கணக்கெழுதுவார்கள்.

 

admk



அப்படி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஏகப்பட்ட வேலைகளை எடுத்து செய்த அன்னை இன்ப்ரா கம்பெனி தனது பில்களை சமர்ப்பித்திருந்தது. ஆந்திராவிலேயே வாங்கப்பட்டிருந்த பொருட்கள் எதற்கும் ஜி.எஸ்.டி. கட்டப்படவில்லை. அத்துடன் ஜி.எஸ்.டி. வரி கட்டப்பட்டது போன்று போலி பில் உருவாக்கப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்த சரக்கு மற்றும் சேவை வரிகள் வாரியத்தின் புலனாய்வுப் பிரிவின் விசாகப்பட்டின கோட்ட அதிகாரிகள், ஆந்திரா முழுவதும் உள்ள அரசு துறைகளில் அன்னை இன்ப்ரா நிறுவனம் கொடுத்த பில்களை கைப்பற்றி சோதனை நடத்தினார்கள். அதில் வெவ்வேறு பினாமி பெயர்களில் ஜி.எஸ்.டி. கணக்குகளை தொடங்கி செலவு செய்யாமலே கணக்கு காட்டி, "எங்கள் கம்பெனி அதிக மூலதனத்தை முதலீடு செய்கிறது' என்பது போல கணக்கு காட்டப்பட்டுள்ளது.

 

admk



இப்படி சுமார் 450 கோடி ரூபாய் பொருட்களை பல்வேறு போலி ஜி.எஸ்.டி. கணக்குகள் மூலம் வழங்கியதாக கணக்கு காட்டியதோடு, இந்த 450 கோடி ரூபாய் செலவுகளுக்காக 60 கோடி ரூபாயை வங்கிகளில் கடனாக பெற்றுள்ளது. அத்துடன் அன்னை இன்ப்ராவை போன்றே ஆந்திராவிலும் தமிழகத்திலும் காண்ட்ராக்ட் எடுத்துள்ள கம்பெனிகளுக்கும் இந்த போலி பில்களை அளித்துள்ளது. இதையொட்டி அன்னை இன்ப்ராவின் உரிமையாளர் அசோக்குமார் என்பவரை கைது செய்து விசாகப்பட்டினத்தில் சிறை வைத்துள்ளது.


இது ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் மட்டும் நடக்கவில்லை. ஹரியானா மாநிலம் சிர்சாவில் 90 கம்பெனிகள் இணைந்து 7600 கோடி ஜி.எஸ்.டி. கட்டாமல் ஏமாற்றியது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இவையெல்லாம் வெறும் வெற்று லெட்டர்பேட் கம்பெனிகள். வருமான வரித்துறையை ஏமாற்றுவதற்கும் வங்கிகளில் கடன் பெறுவதற்கும் ஜி.எஸ்.டி. கட்டியது போன்ற போலி பில்களை இந்த 90 கம்பெனிகளும் தயாரித்துள்ளன. இது தொடர்பாக ஒருவரை கைது செய்து அவரது வீட்டில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சோதனை நடத்திய போது, மொத்தம் 173 வங்கிக் கணக்குகள், அந்த வங்கிகளுடன் தொடர்புடைய 110 கடன் அட்டைகள் கைப்பற்றப்பட்டன என்கிறது ஜி.எஸ்.டி. வரி வசூல் வட்டாரம்.

அன்னை இன்ப்ரா நிறுவனம் தமிழகத்தில் சேலம், சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற எடப்பாடி பழனிச்சாமியால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம். ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் நான்கு மாடி அளவில் ஒரு புதிய அலுவலகத்தை கட்டிய நிறுவனம். சமீபத்தில் வருமான வரித்துறையால் ரெய்டுக்குள்ளான காண்ட்ராக்டர் செய்யாதுரையுடன் இணைந்து தமிழகம் முழுவதும் பாலங்கள், சாலைகள் என பலவற்றை கட்டிய நிறுவனம். இந்த நிறுவனம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 470 கோடி ரூபாய் போலி பில் கொடுத்து ஜி.எஸ்.டி. கட்டாமல் மோசடி செய்துள்ளது.


ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இந்த நிறுவனம் போலிகளுக்கு பெயர் பெற்றது. தமிழகத்தில் இந்த நிறுவனத்தை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். காரணம் அமைச்சர் செங்கோட்டையனுக்கு மிக மிக நெருக்கமான நிறுவனம் இது. ஈரோடு மாவட்டத்தில் செங்கோட் டையன் ஆதரவில் எம்.எல்.ஏ.வானவர் வி.பி.பெரியசாமி. அவரது தம்பி அருணாசலம் செங்கோட்டையனுக்கு நெருக்கமானவர். அவரது அக்காள் மகன்தான் இந்த அசோக்குமார். இவர் சமீபத்தில் ஒரு விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கி செங்கோட்டையனுக்கு பரிசளித்தார். அந்த காரில்தான் செங்கோட்டையன் வலம் வருகிறார் என்கிறார்கள் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆந்திர விவகாரத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் அன்னை இன்ப்ரா நிறுவனம் மேற்கொண்ட பணிகளை புலன் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளதாக ஜி.எஸ்.டி. வரிகளின் புலனாய்வுப் பிரிவு முடிவு செய்துள்ளது. இது தமிழகத்தில் அரசுப் பணிகளை அன்னை இன்ப்ரா பாணியில் மேற்கொண்ட காண்ட்ராக்டர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. பலநூறு கோடி ரூபாய்கள் போலி பில்களை கொடுத்து கணக்கெழுதிய காண்ட்ராக்டர்களும் அரசு அதிகாரிகளும் விழி பிதுங்கி நிற்கிறார்கள். அமைச்சர் வரை பயம் ஏற்பட்டுள்ளது.
 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.