Skip to main content

“சில்லறை தனமா பண்றாங்க...” - ரத்தக்கறை மேக்கப்புடன் விமல்

Published on 07/01/2023 | Edited on 07/01/2023

 

vimal explained about his hospital news

 

‘களவாணி’, ‘வாகை சூட வா’, ‘மஞ்சப்பை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான விமல் கடைசியாக 'விலங்கு' வெப்சீரிஸில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 'எங்க பாட்டன் சொத்து', 'மஞ்சள் குடை', 'குலசாமி', 'துடிக்கும் கரங்கள்' உள்ளிட்ட சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.  

 

இதனிடையே நடிகர் விமல் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இதையடுத்து அது வதந்தி என்று தெரிவிக்கும் வகையில் விமல் படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியானது. இந்த நிலையில், இந்த தகவல் குறித்து நடிகர் விமல், படப்பிடிப்பு தளத்தில் இருந்தபடி ரத்த கறை மேக்கப்புடன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "செய்தி அறிந்தேன். நான் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். புதுமுக இயக்குநர் மைக்கேல் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் உள்ளேன். இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடியப்போகுது. அதனால் வதந்திகளை நம்ப வேண்டாம். 

 

இன்னொரு செய்தியையும் பார்த்தேன். நான் மது பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டிலேயே ரகசிய சிகிச்சை எடுத்து வருவதாக. இதெல்லாம் பார்க்கும் போது சிரிப்பாக வருகிறது. இது போன்று யார் கிளப்பி வருகிறார்கள் என்று தெரியவில்லை. ஏதோ ஒரு வேண்டாத விஷக் கிருமிகள் இது போன்று செய்து வருகிறது. அது யார் என்றும் எனக்கு தெரியும். அதனால், இந்த சின்னப்புள்ள தனமான வேலையை விட்டுவிட்டு உருப்படியான வேலையை பாருங்கள். நீங்களும் வாழுங்கள், மற்றவர்களையும் வாழ விடுங்கள். தேவையில்லாமல் சில்லறை தனமா இந்த செய்திகளைக் கிளப்பி என்னை காயப்படுத்த நினைக்காதீர்கள். 

 

நான் காயமெல்லாம் படமாட்டேன். எனக்கு தெம்பு இருக்கு. ஆண்டவன் கொடுத்த அருள் இருக்கு. 2023 ஆம் ஆண்டில் நல்ல படங்களைக் கொடுப்பேன்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபரீத இன்ஸ்டா ரீல் இளைஞர்கள் கைது; போலீசார் எச்சரிக்கை

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
nn

அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் தருவைகுளத்தில் விபரீதமாக மண்ணுக்குள் குழிதோண்டி அதனுள் இளைஞரை தலைகீழாக புதைத்து சாகசம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்த போலீசார் ரஞ்சித் பாலா அவரது நண்பர்கள் சிவக்குமார், இசக்கி, ராஜா ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தற்போது கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

'பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது' - அதிமுக முன்னாள் நிர்வாகி பேச்சுக்கு த்ரிஷா கண்டனம்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
'It is disgusting to see'-Trisha condemns the speech of ADMK ex-executive

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளை தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்த நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் கண்டங்கள் தெரிவித்து வந்த நிலையில், தற்போது த்ரிஷா இதை உறுதிப்படுத்தி உள்ளார். இதற்கு முன்பே நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்த, தனது கண்டனத்தை த்ரிஷா தெரிவித்திருந்தார். பின்னர் அது நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.