Skip to main content

‘தொடரில் நடிக்க படுக்கைக்கு அழைத்தார்கள்’- பிக்பாஸ் 3 போட்டியாளர் பேட்டி

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

இந்த வருடத்திற்காக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 3 நிகழ்ச்சி பத்து வாரங்களை தாண்டிவிட்டது.  பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்‌ஷி, மதுமிதா ஆகியோரைத் தொடர்ந்து அபிராமி 9-வது போட்டியாளராக வெளியேறினார். இந்த வருடம் பல சர்ச்சைகளை உள்ளடக்கி சென்றுகொண்டிருக்கிறது. வைல்ட் கார்டு எண்ட்ரீயாக கஸ்தூரியும், மக்களால் வெளியேற்றப்பட்ட வனிதாவும் மீண்டும் நுழைந்திருக்கின்றனர். இந்த வார எவிக்‌ஷனாக அபிராமி வெளியேறியுள்ளார்.
 

telugu

 

 

இந்நிலையில் தெலுங்கிலும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியிலிருந்து நடிகை ரோஹினி நோனி வெளியேற்றப்பட்டார்.
 

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவர் சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர்,  ‘நடிப்பில் ஆர்வம் இருந்ததால் பல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க முயற்சி செய்தேன் என்று தெரிவித்தார். ஆனால், அப்படி தேடும் போது பல இடங்களில் என்னை படுக்கைக்கு அழைத்தார்கள். ஆனால், நான் அப்படி செய்தால் தான் நடிக்க வேண்டுமா என்று அந்த வாய்ப்புகளே வேண்டாம் என கூறிவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்