Skip to main content

தமிழ் படத்திற்கு புதுச்சேரி அரசு விருது...

Published on 02/12/2020 | Edited on 02/12/2020
parthiban

 

 

இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாக தருபவர்.  ஹவுஸ் புல், ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்'  போன்ற படங்கள் அதற்கு உதாரணம். இவர் கடைசியாக ‘ஒத்த செருப்பு’  படத்தை எழுதி, இயக்கி, நடித்திருந்தார். 

 

பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்திருந்த இப்படத்தை, அவரே தயாரித்திருந்தார். உலக சினிமா வரலாற்றில், இதற்கு முன்பு ஒருவர் மட்டுமே நடித்து வெளிவந்த படங்கள் வெறும் பனிரெண்டுதான். பார்த்திபனின் இந்த முயற்சி, ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றது மட்டுமில்லாமல் பல்வேறு விருது விழாக்களுக்கும்  தேர்வு செய்யப்பட்டது. 

 

இந்தநிலையில் தற்போது, புதுச்சேரி மாநில அரசின், சிறந்த படத்திற்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதை ஒத்த செருப்பு படம் வென்றுள்ளது. 2019 ஆம் ஆண்டின் சிறந்த படமாக, இப்படத்தை புதுச்சேரி அரசு தேர்ந்தெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, படத்தின் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், புதுச்சேரி மாநில முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர்  தனது ட்விட்டர் பதிவில், " புதுச்சேரி அரசின் சிறந்த படத்திற்கான விருது, ஒத்த செருப்பு-க்கு. அம்மாநில மாண்புமிகு முதல்வருக்கும், தேர்வு செய்தவர்களுக்கும் மன நிறை நன்றி" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்