Skip to main content

"எப்படியாவது மீண்டுவிடுவார் என நினைத்தேன்" - சுரேஷ் காமாட்சி இரங்கல்!

Published on 29/05/2021 | Edited on 29/05/2021

 

gdsgbsdbs

 

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இதற்கிடையே கரோனா இரண்டாம் அலையால் சில மாதங்களாகவே விவேக், கே.வி. ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன், பவுன்ராஜ், அருண்ராஜா காமராஜ் மனைவி சிந்துஜா, நிதீஷ் வீரா உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்கள் தொடர்ச்சியாக உயிரிழந்துவருவது மக்களிடையே கவலையையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்நிலையில் நடிகரும், பல வெற்றி திரைப்படங்களை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பு நிறுவனமான அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட், கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று (29/05/2021) சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 60. இவரது மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்ற நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்... “நடிகனாகவும்... பல படங்கள் உருவாகக் காரணமாகவும்... சமீபத்திய ட்ரெண்டிற்கேற்ப யூட்யூப் பங்களிப்பில் தன்னை அடையாளப்படுத்தியும் வந்த அண்ணன் வெங்கட் கரோனாவினால் மறைந்தார் எனக் கேட்கும்போது அதிர்ச்சியாக இருந்தது. எப்படியாவது மீண்டுவிடுவார் என்ற எங்களின் எதிர்பார்ப்பை தகர்த்துவிட்டார். அவரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்