Skip to main content

யார் ஹீரோ? சிக்கலில் சிவகார்த்திகேயன் படக்குழு...

Published on 02/10/2019 | Edited on 02/10/2019

அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வேலைக்காரன் படத்திற்கு பிறகு ரசிகர்களை மிகவும் கவர்ந்த படம் ஒன்றில் சிவா நடித்துள்ளார் என்று அவருடைய ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். சிவா, மிஸ்டர் லோக்கலுக்கு பின் வரிசையாக நான்கு படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
 

sivakarthikeyan

 

 

அதில் ஒரு படம்தான் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ஹீரோ. இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் வெளியான சமயத்தில்தான் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஐந்து மொழிகளில் ஹீரோ என்றொரு படம் உருவாகுவதாகவும் அறிவிப்பு வெளியானது.
 

மேலும் விஜய்தேவரகொண்டாவை வைத்து ஹீரோவை எடுக்கும் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தின் டைட்டில் உரிமையை நாங்கள்தான் பதிவு செய்து வைத்திருக்கிறோம் என்று முன்னமே தெரிவித்திருந்தது. ஆனாலும், இதை கண்டுகொள்ளாமல் சிவா படத்தின் போஸ்டர் வரை ஹீரோ என்றே டைட்டில் வெளியாகியுள்ளது. 
 

100


இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவை வைத்து ஹீரோ படத்தை தயாரிக்கும் ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம் இதை சட்டப்படி அணுகுவதற்காக கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் இரண்டு நிறுவனங்களும் இப்போது யார் படத்தின் டைட்டில் ஹீரோ என்ற பிரச்சனையில் இறங்கியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்