Skip to main content

இந்தியத் திரைப் பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் குழு!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Oscar team invited Indian film celebrities!

திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 96ஆவது ஆஸ்கர் விருது விழா கடந்த மார்ச் 10ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. 

அதே சமயம், ஆஸ்கர் விருதுக் குழுவில் உறுப்பினராகச் சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைத்துறை கலைஞர்கள், பிரபலங்கள் அழைக்கப்படுவார்கள். அதில், தொழில் ரீதியான தகுதி, அர்ப்பணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் ஆஸ்கர் குழுவின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் சேர உலகம் முழுவதும் உள்ள 487 திரைக்கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதில், இந்திர திரைப் பிரபலங்களான இயக்குநர் ராஜமெளலி, அவரது மனைவியும் ஆடை வடிவமைப்பாளரான ரமா ராஜமெளலி, நடிகை ஷபானா ஆஸ்மி, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், இயக்குநர் ரீமா தாஸ் மற்றும் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கர் விருது வென்ற நடன இயக்குநர் பிரேம் ரஷித் உள்ளிட்டோருக்கு உறுப்பினர்களாக சேர ஆஸ்கர் குழு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

2024ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது குழுவின் உறுப்பினர் பட்டியலில் இடம்பெறும் இந்திய திரைப் பிரபலங்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆஸ்கர் விருது குழுவில் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் சூர்யா ஆகியோர் ஏற்கெனவே உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆஸ்கர் நூலகத்தில் தமிழ் படம் 

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
parking movie in oscar library

திரைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் விருதுகள் ஆஸ்கர் விருதுகள். இந்த விருதுகள் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என்ற குழுவால் மேற்பார்வையிட்டு வழங்கப்படுகிறது. இந்தக் குழு மாணவர்கள், இயக்கநர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள் மற்றும் சினிமா சார்ந்த பலரின் ஆய்வுக்காக திரைப்படங்களில் திரைக்கதைகளை தனது மார்கரெட் ஹெரிக் நூலகத்தில் (Margaret Herrick Library) முக்கிய சேகரிப்பில் சேர்த்துவைக்கும். 

1910ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நூலகம், பல ஆண்டுகளில் பன்மடங்கு உயர்ந்து, தற்போது வரை 11,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் திரைக்கதைகள் உள்ளன. இதில் இந்திய படங்களும் இடம்பெற்றுள்ளன. அவை லகான் (2001), தேவதாஸ் (2002), சக் தே இந்தியா (2007), ராக் ஆன் (2008), ராஜநீதி (2010), குசார்சிஹ் (2010), ஆர். ராஜ்குமார் (2013), ஹேப்பி நியூ இயர் (2014), பார்ச்ட் (2015), பேபி (2015), 'செல்லோ ஷோ' (2022), ஸ்விகடோ (2022) ஆகும். 

இந்த வரிசையில் தற்போது தமிழ் படம் ஒன்று ஆஸ்கரின் நூலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பார்க்கிங்’ பட திரைக்கதை தற்போது ஆஸ்கரின் நூலகத்தில் முக்கிய சேகரிப்பில் நிரந்தர சேகரிப்பாகவுள்ளது. இதனைப் படக்குழு தங்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  

parking movie in oscar library

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி வெளியான படம் ‘பார்க்கிங்’. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி வழங்கிய இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா நடித்திருந்தார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல நடிகர்களும் இதில் நடித்திருந்தனர். த்ரில்லர் டிராமா ஜானரில் உருவான இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பைப் பெற்ற இப்படம் தற்போது ஆஸ்கர் நூலகத்தில் இடம்பெற்றுள்ளது பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. 

Next Story

அனிமேஷன் சீரிஸாக வெளியாகும் பாகுபலி

Published on 02/05/2024 | Edited on 02/05/2024
bahubali to come in animation series

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் பாகுபலி. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம், உலக அளவில் ரூ.600 கோடியைக் கடந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2017ஆம் ஆண்டு வெளியாகி முதல் பாகத்தை விட அதிக வசூல் ஈட்டியது. உலகமுழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 

இந்த நிலையில் பாகுபலி படத்தின் முன் கதை அனிமேஷன் வடிவில், வெப் சீரிஸாக வெளியாகிறது. 'பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்' என்ற தலைப்பில் வருகிற 17ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெயாகிறது. இந்த சீரிஸின் கதை பாகுபலி படட்தின் முன் கதை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பாகுபலி மற்றும் பல்வால்தேவாவின் வாழ்க்கையில் அறியப்படாத பல திருப்பங்களையும், மகிஷ்மதியை பற்றியதாகவும் உருவாகியிருக்கிறது. இந்த சீரிஸின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலர் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது .