Skip to main content

நடிகைகளுடன் இணைந்து சுஹாசினி மணிரத்னம் எடுத்த முயற்சி!

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

Suhasini ManiRatnam

 

தென்னிந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை அடுத்த தலைமுறைக்கு மறு அறிமுகம் செய்யும் நோக்கோடு, நடிகை சுஹாசினி மணிரத்னம் 'மார்கழித் திங்கள்' என்ற நகர்வை முன்னெடுத்துள்ளார். இதில், தொழில் ரீதியான பாடகர்கள் அல்லாத 9 நடிகைகள் இணைந்து ஆண்டாளின் 'திருப்பாவை' முதல் பாசுரத்தைப் பாடியுள்ளனர்.

 

இதுபற்றி சுஹாசினி மணிரத்னம் கூறும்போது, "உமா பத்மனாபன், ரேவதி, நித்யா மேனன், ரம்யா நம்பீசன், அனு ஹாசன், கனிஹா, ஜெயஶ்ரீ, ஷோபனா நான் என மொத்தம் ஒன்பது பேர் இப்பாசுரத்தைப் பாடியுள்ளோம். நாங்கள் தொலைப்பேசியிலேயே பாடிய பாடல்களை, சுபஶ்ரீ தணிகாசலம் அழகாகத் தொகுத்துள்ளார். பாடல்களுக்கான ஒளிப்பதிவை பகத் மேற்கொண்ட போதும் சிலர் தங்களது தொலைப்பேசியிலேயே காணொளியாகப் பதிவு செய்தனர். ரவி ஜி இசையமைக்க, படத்தொகுப்பு பணிகளைக் கெவின்தாஸ் கவனித்துக்கொண்டார். இந்த வருடம் மட்டுமின்றி அடுத்த வருடமும் இது போல ஒரு பாசுரத்துடன் உங்களை மகிழ்விப்பதே எங்கள் நோக்கம்" எனத் தெரிவித்தார். 

 

நடிகர் கமல்ஹாசன், மாதவன் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய மூவரும் இப்பாசுரத்தை நாளை (08.01.2021) மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"சுஹாசினி பேசியதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" - சர்சைக்கு சரத்குமார் விளக்கம்

Published on 28/09/2022 | Edited on 28/09/2022

 

sarathkumar explain suhasini controversy speech

 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.  

 

அதன் ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் பட விழாவில் பேசிய  நடிகையும், மணிரத்னத்தின் மனைவியுமான சுகாசினி, "பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு அதிகம் ஆந்திர மற்றும் தெலுங்கானாவில்தான் நடந்துள்ளது. இது உண்மையான தமிழ் கதையாக இருந்தாலும், தமிழ்நாட்டில் பொள்ளாச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு இடங்களில் அதிகபட்சமாக 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்துள்ளது. மீதமுள்ள படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் இங்குதான் நடந்துள்ளது. ஆகையால் இது  தெலுங்கு மக்களின் படம். நீங்கள்தான் இதற்கு முழு ஆதரவு தர வேண்டும்" கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. 

 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்காக சரத்குமார் சந்தியாளர்களை சந்தித்து நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது நிருபர் ஒருவர், சுஹாசினி பேசியதாய் குறிப்பிட்டு, இது அவர்களின் படம் என்றால் நமது பெருமையை விட்டுக்கொடுப்பது போல இல்லையா என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு சரத்குமார், "அப்படி எல்லாம் ஒன்னும் இல்லங்க.இது நம்ம பார்வையை பொறுத்து தான் இருக்கு. சுஹாசினி சொன்னதை நான் தவறு என்று சொல்லமாட்டேன். ஒரு ஆர்வத்தில் சுஹாசினி படப்பிடிப்பை நாங்க வெளிமாநிலத்தில் நடத்தினோம் என்று சொன்னது அந்த இடத்திற்கு பொருத்தமாகவும், சிறப்பாகவும் இருக்கும் என்று நினைத்து கூறியிருக்கலாம். அதை நாம தவறாக எடுத்துக் கொள்ள கூடாது. சுஹாசினி சொல்லியதை ரப்பர் வச்சு அழித்துவிடுங்கள். குறை கண்டுபிடித்தால், எல்லா விஷயத்திலும் கண்டுபிடிக்கலாம். குறையை மறந்துவிட்டு நிறையை மட்டும் பேசுவோம" என பதிலளித்துள்ளார். 

 

 

Next Story

சுயலாபத்திற்காகத் தமிழ் உச்ச நடிகர்கள் இந்த பிரச்சனை குறித்து பேசுவதில்லை - அமீர் தாக்கு 

Published on 04/05/2022 | Edited on 04/05/2022

 

director ameer said Tamil top heros dont talk about language problem selfish

 

இந்தி மொழியை ஆட்சி மொழியாக மாற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதில் இருந்து இந்தி மொழி குறித்த விவாதங்கள் அனல் பறக்க தொடங்கியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஒரு பட விழாவில் 'இந்தி தேசிய மொழி இல்லை' என கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் 'இந்திதான் நமது தேசிய மொழி' என்று பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார். இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற நடிகை கங்கண ரனாவத் இந்தி, ஆங்கிலம், ஜெர்மனி உள்ளிட்ட மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது. அதனால் சமஸ்கிருதம் தான் தேசிய மொழி என பேசினார். இதையடுத்து அஜய் தேவ்கனின் லிஸ்டில் கங்கனாவையும் சேர்த்த இணையவாசிகள் பாரபட்சமின்றி வறுத்தெடுத்தனர். 

 

இவர்களைத் தொடர்ந்து நடிகை சுஹாசினி மணிரத்னம், "இந்தி ஒரு நல்ல மொழி. அதை கற்றுக்கொள்ள வேண்டும். இந்தி மொழி பேசுபவர்கள் நல்லவர்கள், அவர்களுடன் பேச வேண்டும் என்றால் அந்த மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்" என பேசியிருந்தார். இவரின் இந்த பேச்சு மீண்டும் பரபரப்பை கிளியுள்ளது. 

 

சுஹாசினி கருத்துக்கு பதிலளித்த இயக்குநர் அமீர், "இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்றால், அப்போ தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி பேசுபவர்கள் எல்லாம் கெட்டவர்களா? இதை சுஹாசினி விளக்கவேண்டும். இந்த மண்ணில் ஆரியம் மிக ஆழமாக காலுன்றியிருக்கிறது. அது ரொம்ப ஆபத்தானது. அந்த ஆரியம் புதிது புதிதாக ஏதாவது ஒன்றை கொண்டு வந்து கொண்டிருக்கும். இந்தி தெரியாத மக்கள் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என சொல்கிறார்கள். நாட்டை விட்டு வெளியேற தயார், எது நாடு, யார் யார் இன மக்கள் என சொல்ல வேண்டும். இந்தியைத் திணிப்பவர்கள் என் தேசத்தை விட்டு வெளியேற வேண்டும். மற்ற மொழி நடிகர்களை போல தமிழில் இருக்கும் உச்ச நடிகர்கள் சுயலாபத்திற்காக மொழி பிரச்சனை குறித்து பேசுவதில்லை. அப்படி பேசினால் தனக்கு இருக்கும் சினிமா வாய்ப்பு பறிபோகும் என்ற அச்சம் தான் அதற்கு காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.