Skip to main content

"திருமணம் எப்போது..? நான் தான் ப்ரொபோஸ் பண்ணேன்..." - நடிகர் கௌதம் கார்த்திக் கலகல பேச்சு

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

 

"I am proposing Pannanan..."- actor Gautham Karthik's lively speech!

 

சென்னையில் நேற்று (23/11/2022) நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

 

அப்போது பேசிய நடிகர் கௌதம் கார்த்திக், "செய்தியாளர்கள் அனைவருக்கும் வணக்கம். இங்க வந்ததற்கு மிக்க நன்றி. ரொம்ப நாளாச்சு உங்கள எல்லாம் சந்திச்சு. இன்னைக்கு ஒரு குட் நியூஸ் ஷேர் பண்றதுக்காகத்தான் நாங்க கூப்பிட்ருக்கோம். குட் நியூஸ் என்னன்னா, வர நவம்பர் 28-ஆம் தேதி, எனக்கும் மஞ்சிமாவுக்கும் கல்யாணம் ஆகப் போகுது. இது ஒரு சின்ன ஃபேமிலி ஈவென்ட் தான். சென்னையில் தனியார் இடத்துல கல்யாணம் நடக்குது. அதனால உங்கள முன்கூட்டியே சந்திக்கிறோம். உங்களோட பிளஸ்சிங் எங்களுக்கு எப்போதுமே தேவை. 

 

நான் இண்டஸ்ட்ரீல ஸ்டார்ட் பண்ணதுல இருந்து நீங்க என் கூடவே இருந்திருக்கிங்க. 2013-ஆம் ஆண்டில் இருந்து என் கூடவே இருந்துருக்கீங்க. திருமணத்திற்குப் பிறகு மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன்." எனத் தெரிவித்தார். 

 

அதைத் தொடர்ந்து பேசிய நடிகை மஞ்சிமா மோகன், "எல்லாருக்கும் வணக்கம். ஜெனரலா டிஃப்ரென்ட் ஸ்டேட்ஸ்-ல இருந்து வரும் போது எப்போதுமே கொஞ்சம் பயம் இருக்கும். ஃபர்ஸ்ட் மூவி, ஃபர்ஸ்ட் டே-ல இருந்து எனக்கு எப்போதுமே அந்த லவ்விங் சப்போர்ட் இருந்துருக்கு. நவம்பர் 28-ஆம் தேதி அன்று காலை எங்களது கல்யாணம் நடக்க இருக்கிறது. வரவேற்பு நிகழ்ச்சி கிடையாது. மிக எளிமையாகவும், சிறப்பாகவும் ஒரு வேளை மட்டுமே எங்களது நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. முடிஞ்ச வரைக்கும் புகைப்படங்கள் 12.00 மணி முதல் 01.00 மணிக்குள் உங்களுக்கு அனுப்ப முயற்சிக்கிறோம்." என்றார். 

 

பின்னர், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் கௌதம் கார்த்திக், "நான் தான் ப்ரோபோஸ் பண்ணணண். அவங்க ஒரு ரெண்டு நாள் டைம் எடுத்தாங்க. அந்த இரண்டு நாள் எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. பட் ஓகேன்னு சொல்லி அக்செப்ட் பண்டாங்க" எனத் தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷங்கர் வீட்டு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
shankar daughter aishwarya marriage cm mk stalin wished

முன்னணி இயக்குநராக வலம் வரும் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் அதிதி ஷங்கர், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மூத்த மகள் ஐஸ்வர்யா, பணியாற்றி வருவதாக கூறப்படும் நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு தொழிலதிபர் மற்றும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட சில முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ரோஹித் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ரோகித்தை ஐஸ்வர்யா விவாகரத்து செய்தார். பின்பு ஷங்கர் வீட்டிலே வசித்து வந்த அவர், கடந்த பிப்ரவரி மாதம் தருண் கார்த்திகேயன் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து திருமண விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின், மற்றும் திரைப்பிரபலங்கள் பலருக்கும் ஷங்கர் அழைப்பிதழ் வழங்கினார்.  

இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story

‘மயிலிறகே மயிலிறகே…’ - மணக்கோலத்தில் நடிகை நிலா

Published on 13/03/2024 | Edited on 13/03/2024

 

எஸ்.ஜே சூர்யா இயக்கி நடித்த அன்பே ஆருயிரே படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை நிலா. தமிழில் நிலா என்ற பெயரில் நடித்து வந்த இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடித்து வந்தார். இவருடைய உண்மையான பெயரும் மீரா சோப்ரா என்பதும் பிரபல பாலிவுட் நடிகையான ப்ரியங்கா சோப்ராவின் உறவினரின் தங்கை தான் மீரா சோப்ரா என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக தமிழில் பரத் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான கில்லாடி படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், தொழில் அதிபர் ரக்‌ஷித் கெஜ்ரிவால் என்பவரை மீரா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். ஜெய்ப்பூரில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் நடந்த இவர்களது திருமணத்தில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். தற்போது, இவர்களுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.