Skip to main content

"இந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது!" - சேரன் வேதனை!

Published on 27/04/2021 | Edited on 27/04/2021
gvshgs


கடந்த சில மாதங்களாக கரோனா பரவல் ஓரளவிற்குக் கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது கரோனா இரண்டாம் அலை. இது கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் உட்பட பல்வேறு பிரபலங்களும் மீண்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கே.பாலச்சந்தரின் ரெட்டை சுழி, சமுத்திரக்கனியின் 'ஆண் தேவதை' படங்களை இயக்கிய இயக்குநர் தாமிரா, சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டார். 

 

இவர் சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (27.04.2021) காலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவருக்கு திரைத்துறை சார்ந்த பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சேரன் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்...

 

"நண்பர் தாமிரா... இரட்டைச்சுழி, ஆண்தேவதை படத்தின் இயக்குனர்... கொரோனா பாதிப்பின் காரணமாக பிரிந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது..  அவரது ஆன்மா அமைதி கொள்ளவேண்டும்.. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்கள். #RIPThamira" உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்