Skip to main content

தவறாகப் பேசுபவர்கள் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை - அருண் & அரவிந்த்

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

Arun Aravind Twins - Fun Couple Interview

 

இணையத்தை கலக்கும் இரட்டையர்கள் அருண் - அரவிந்த்;  தங்களது குடும்பத்தோடு ஒரு சிறப்பு நேர்காணல்...

 

எங்களுடைய குடும்பம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். மனைவி வந்த பிறகும் எங்களுடைய வாழ்க்கையை எங்களுடைய போக்கிலேயே நாங்கள் வாழ்கிறோம். எங்களுடைய வளர்ச்சிக்கு தடையாக அவர்கள் எப்போதும் இருந்ததில்லை. கூட்டுக்குடும்பமாக நாங்கள் இருப்பதையே பலர் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். எங்களுடைய குழந்தைகளுக்கு இரட்டையர்களில் யார் அப்பா என்கிற சந்தேகமே வராது. இரண்டு குடும்பத்தினருமே அவர்களுக்கு அப்பா அம்மா தான். இதன் மூலம் குழந்தைகள் இன்னும் நம்பிக்கையோடு வாழ முடியும்.

 

இது குறித்து தவறாகப் பேசுபவர்கள் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அவர்கள் யாரும் வாழ்க்கையை இன்னும் உணரவில்லை என்றே நினைக்கிறோம். எங்களுடைய திருமண வாழ்க்கையும் நாங்கள் எதிர்பார்த்தது போலவே நடந்தது. நிறைய போராட்டங்களைக் கடந்தே எங்களுடைய திருமணம் நடைபெற்றது. எங்களுக்குள் எப்போதும் ஒரு நல்ல புரிதல் இருக்கிறது. சகோதரர் அமைந்தது போல மனைவியும் எங்களுக்கு அன்பானவர்களாக அமைந்தனர். காதலில் விழுந்த பிறகு வீட்டில் பேசிப் பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். அதன்படி பேசி எங்களுடைய திருமணம் நடைபெற்றது.

 

இரட்டையர்களாக நாங்கள் பொய் சொல்ல வேண்டும் என்றாலும் கூட இருவரும் சேர்ந்தே சொல்ல வேண்டும். வெளியே சென்று திரும்பும்போது வீட்டுக்கு வர எவ்வளவு நேரம் ஆகும் என்பதைச் சரியாகச் சொல்லாமல் இருப்பது தான் எங்களுக்கும் மனைவிக்கும் சண்டை வர முக்கியமான காரணமாக இருக்கும். இரட்டையர்களை மையமாக வைத்து வந்த வாலி, ஜீன்ஸ் படங்கள் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். மாற்றான் படத்தின் இரண்டாம் பாதியில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எங்கள் இருவரில் ஒருவருக்கு ஏதேனும் வலி ஏற்பட்டால் அதை இன்னொருவராலும் உணர முடியும். எங்களுடைய குழந்தைகளுக்குள்ளும் அந்த அன்பும் ஒற்றுமையும் இருக்கிறது. நாங்கள் இருவரும் ஒன்றாகப் பயணிப்பது தான் எங்களுடைய பலம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story

கார் ஓட்டுநரை தாக்கிய லாரி ஓட்டுநர்; கதறி அழுத மனைவி

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

Lorry driver hits car driver; A crying wife

 

சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள ரேடியல் சாலையில் கார் ஒன்றின் மீது லாரி மோதிய சம்பவத்தில் கார் ஓட்டுநருக்கும் லாரி ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், லாரி ஓட்டுநர் கார் ஓட்டுநரை அவருடைய மனைவி முன்பே தாக்கிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

ரேடியல் சாலையில் லாரி மோதியதில் கார் சேதமடைந்தது. இதனால் கார் ஓட்டுநர் லாரி ஓட்டுநரிடம் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்பொழுது லாரி ஓட்டுநர் அலட்சியமாக பதில் சொன்னதாலும், ஆபாசமாக பேசியதாலும் லாரியின் சாவியை கார் ஓட்டுநர் எடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காரில் வந்த நபரின் மனைவி முன்பே லாரி ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. காரில் வந்த நபரின் மனைவி கதறி அழுது கூச்சலிட்ட நிலையிலும் அவர் மீது தாக்குதல் தொடர்ந்தது. இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பல்லாவரம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.