Skip to main content

"மாஸ்டர் வந்ததும் கரோனா சென்றது..!"- இசையமைப்பாளர் அம்ரிஷ்

Published on 18/01/2021 | Edited on 18/01/2021
gvesgse

 

ரேகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'வெட்டி பசங்க' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட இசையாமைப்பாளர் அம்ரிஷ் பேசும்போது...

 

"கடந்த வருடம் எல்லோருக்கும் கஷ்டம் கொடுத்தது. நிறைய இழப்புகளை சந்தித்திருப்போம். நான் எனது தந்தையை இழந்தேன். மாஸ்டர் திரையரங்குகளில் நுழைந்ததும் கரோனா வெளியே சென்று விட்டது. ஒரு படம், இரண்டு படம் இசையமைத்து விட்டாலே நாங்கள் தாமதமாக வருவோம். ஆனால் மலையாளத்தில் இத்தனைப் படங்களுக்கு இசையமைத்து விட்டு இங்கு மிகவும் அமைதியாக அமர்ந்திருக்கும் இசையமைப்பாளர் வி.தஷியை வாழ்த்துகிறேன். அவரை நான் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வேன்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 26 கோடி மோசடி... பிரபல தமிழ் இசையமைப்பாளர் அதிரடி கைது!

Published on 17/03/2021 | Edited on 17/03/2021

 

amrish

 

‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘பொட்டு’, ‘சார்லி சாப்ளின் 2’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் அம்ரிஷ். பிரபல பழம்பெரும் நடிகை ஜெயசித்ராவின் மகனான இவர், சென்னை வளசரவாக்கம், ஜானகி நகரைச் சேர்ந்த தொழிலதிபர் நெடுமாறனிடம், இரிடியம் கலந்த கோயில் கலசம் தன்னிடம் இருப்பதாகவும், அதை அலுவலகத்தில் வைத்து பூஜை செய்தால் தொழில் வளர்ச்சி அடையும் என்றும் ஆசை வார்த்தை காட்டியுள்ளார். அதை நம்பிய நெடுமாறன், அந்தக் கலசத்தை ரூ. 26 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். சில நாட்கள் கழித்து சோதனை செய்தபோது அது போலியானது எனத் தெரியவந்துள்ளது. நெடுமாறன் இதுகுறித்து அம்ரிஷிடம் கேட்டபோது, அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து, தன்னிடம் பண மோசடியில் ஈடுபட்ட அம்ரிஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நெடுமாறன் புகார் அளித்தார்.

 

இதனைத்தொடர்ந்து, சென்னை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து அம்ரிஷிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அம்ரிஷ் பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, மோசடி உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், அம்ரிஷை அதிரடியாகக் கைது செய்தனர்.

 

 

Next Story

''ஒருவேளை அது நடக்காமல் போனால், நீங்கள்தான் பிறக்க வேண்டும்!'' - இசையமைப்பாளர் அம்ரீஷ் 

Published on 11/05/2020 | Edited on 11/05/2020

 

mmg

 

திரையுலகினர் பலரும் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துகள் தெரிவித்து வந்த நிலையில் இசையமைப்பாளர் அம்ரீஷ் தனது அன்னைக்கு வாழ்த்துகள் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...
 

"கரோனா ஊரடங்கில் அனைவரும் வீட்டில் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். பாதுகாப்புடன் வீட்டிலேயே இருங்கள். கரோனாவில் இருந்து கண்டிப்பாக அனைவரும் கூடிய விரைவில் வெளியே வந்துவிடுவோம் என்று நானும் நம்புகிறேன். நீங்களும் நம்பிக்கையோடு இருங்கள். அதேசமயம், இன்று அன்னையர் தினம். ஆகையால், என் அம்மாவிற்கு வாழ்த்துகள் கூறுவதற்கு விரும்புகிறேன். என் அம்மா நடிகை ஜெயசித்ரா அவர்களைப் பற்றி ஒரே வரியில் கூறவேண்டுமென்றால், 'அவர் இல்லையென்றால் நான் இல்லை'. அவரால் தான் நான் இன்று இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். மிக்க நன்றி அம்மா! என்னை ஆளாக்க மிகுந்த முயற்சி எடுத்திருக்கிறீர்கள். அதற்காக நான் சாகும்வரை கடமைப்பட்டுள்ளேன். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் மீண்டும் உங்களுக்கே மகனாகப் பிறக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். ஒருவேளை அது நடக்காமல் போனால், நீங்கள் எனக்கு மகளாகவோ, மகனாகவோ பிறக்க வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து அம்மாக்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்" எனக் கூறியுள்ளார்.