Skip to main content

கைதியைக் கொன்ற அஜய் தேவ்கன் - வருத்தத்தில் ரசிகர்கள்

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

ajay devgan bhola teaser trolled by kaithi movie fans

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற படம் 'கைதி'. ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை, சஸ்பென்ஸ் கலந்து த்ரில்லிங்குடன் சொல்லியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீசானது.

 

இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை நடிகர் அஜய் தேவ்கன் வாங்கியிருந்தார். 'போலா' என்ற தலைப்பில் இப்படத்தில் நடித்து அதனை இயக்கியும் உள்ளார். பொதுவாக, இந்தி ரீமேக்கில் அவர்களுக்கு ஏற்றாற்போல் கதையில் மாற்றம் செய்து உருவாக்குவார்கள். அந்த மாற்றம் பல படங்களுக்கு ஒர்க்அவுட் ஆவதில்லை என்பது தான் பலரின் வருத்தம். இதற்கு உதாரணமாக 'போக்கிரி', 'காஞ்சனா', 'ராட்சசன்' என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் இப்போது புதிதாக இணைந்துள்ளது கைதி படத்தின் இந்தி ரீமேக்கான 'போலா'. 

 

'போலா' படம் அடுத்த ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் தான் தற்போது இணையவாசிகளின் ட்ரோல் மெட்டீரியல். 'கைதி' படத்தைப் பார்த்து ஃபயர் விட்ட ரசிகர்கள் எல்லாம் 'போலா' பட டீசரை பார்த்து, 'என்னடா பண்ணி வச்சிருக்கீங்க...', 'படத்தை கொலை செய்து விட்டார் அஜய் தேவ்கன்' என கமெண்ட்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர். மேலும், கைதி பட ரசிகர்கள் 'இது கைதி படம் தானா...இல்ல வேறொரு படமா' என வருத்தத்தில் உள்ளனர். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கார்த்தியுடன் கூட்டணி அமைக்கும் மாரி செல்வராஜ்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
mari selvaraj next with karthi

மாமன்னன் படத்தை தொடர்ந்து வாழை என்ற தலைப்பில் ஒரு படம் எடுத்து வருகிறார் மாரி செல்வராஜ். இப்பட பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

இதையடுத்து துருவ் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இப்படம் 2021ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில் மாரி செல்வராஜின் அடுத்தடுத்த படங்களால் படப்பிடிப்பு தள்ளி போனது. இப்போது, வருகிற 15 ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட காலமாக துருவ் விக்ரம் கபடி பயிற்சி எடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து ரஜினியின் 172வது படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பாக லலித் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கடந்த ஜனவரி மாதம் தகவல் வெளியானது. அதன் பிறகு இப்படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் மாரி செல்வராஜ் கார்த்தியுடன் இணைந்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கார்த்தி தற்போது நலன் குமாரசாமியுடன் ஒரு படம், பிரேம் குமாருடன் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார். இதில் பிரேம் குமார் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவுற்றது. நலன் குமாரசாமி படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் உலா வருவது குறிப்பிடத்தக்கது.  

Next Story

கார்த்தியின் அடுத்த படக்குழு வெளியிட்ட அப்டேட்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
karthi 26 movie update

கார்த்தி தற்போது பிரேம் குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து முடித்துள்ளார். கார்த்தியின் 27வது படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதாக சமீபத்தில் படக்குழு தெரிவித்தது.

இதனிடையே, நலன் குமரசாமி இயக்கத்தில் கார்த்தி ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கார்த்தியின் 26வது படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் பூஜை வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. பூஜையில் சூர்யா, சிவகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் கவுதம் கார்த்திக்கும் கலந்து கொண்டுள்ளார். விரைவில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.