Skip to main content

"நூதன முறையில் ஜெயிலில் இருந்து தப்பிய சோப்ராஜின் கதை" - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 10

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

Thilagavathi IPS (Rtd) Thadayam : 10

 

இந்தியாவையே நடுங்க வைத்த கொடூர மனிதன் சோப்ராஜ் ஜெயிலிலிருந்து தப்பியது பற்றிய பல்வேறு தகவல்களை நம்மோடு தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி பகிர்ந்துகொள்கிறார்.

 

சோப்ராஜ் தப்பிக்காத சிறைச்சாலைகளே இல்லை என்று சொல்லலாம். மற்ற இடங்களில் பாதுகாப்பு குறைவு என்று கருதியதால் நேபாளத்திற்கு சென்றான். பிற நாட்டினருக்கும் மயக்க மருந்து கொடுத்து தன்வயப்படுத்துவது அவனுக்குக் கைவந்த கலை. அதுபோன்று நேபாளத்திலும் இருவரை கொலை செய்கிறான். அவனுக்கு பல்வேறு மொழிகளில் பேசத் தெரியும். இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் தாய்லாந்து தப்பிச் செல்கிறான். அங்கும் இவனுடைய கொலைகள் தொடர்ந்தன. 

 

தாய்லாந்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அவனையும் அவனுடைய கூட்டாளிகளையும் கண்டுபிடித்து கைது செய்தனர். அதன் பிறகு மர்மமான முறையில், போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி அவர்கள் விடுவிக்கப்பட்டனர். தாய்லாந்து போலீசார் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்களை விடுவித்தனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. மீண்டும் அவன் டெல்லிக்கு வந்தான். மீண்டும் சிலரைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு குற்றச்செயல்களைத் தொடர்கிறான். அதன் பிறகு இந்திய போலீசாரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டான். 

 

திகார் சிறையில் அனைத்து வசதிகளுடனும் ஒரு ராஜா போல் வாழ்ந்து வந்தான். சிறைக்குள் 7 குற்றவாளிகளைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு, தனக்கெனத் தனி அணி ஒன்றை அமைத்துக்கொண்டு தப்பிக்கத் திட்டமிட்டான். அதிகாரிகளுக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்தான். அவர்கள் மயக்கமடைந்த பிறகு அவர்களுடைய கைகளையும் கால்களையும் கட்டி தனித்தனி அறையில் அடைத்தான். மயக்கத்தில் இருந்த சிறை அதிகாரி ஒருவரையும் காரில் ஏற்றிக்கொண்டு தன் கூட்டாளிகளுடன் தப்பித்தான்.

 

இது ஒரு தேசிய அவமானம் என்று பத்திரிகைகள் எழுதின. சிறை அதிகாரிகளுக்கு பணம் கொடுத்தே அவன் தப்பித்துச் சென்றான் என்று அனைவரும் பேசினர். அனைத்து இடங்களிலும் அவனைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அதற்கு முன்பு ஒருமுறை அவனைக் கைது செய்த அனுபவமிக்க ஷிண்டே என்கிற அதிகாரி கோவாவில் அவனைப் பிடித்தார். பலத்த பாதுகாப்போடு அங்கிருந்து அவனை மும்பைக்கு அழைத்து வந்தார். மீண்டும் அவன் சிறையில் அடைக்கப்பட்டான். 

 

ஆனால், இப்படி அவன் தப்பித்தது மீண்டும் கோவாவில் சிக்கியது என்று அனைத்தும் சோப்ராஜ் நடத்திய நாடகம்தான் என்பது தெரிந்தது. தாய்லாந்து போலீசாரிடம் சிக்கினால் தூக்கில் போட்டு விடுவார்கள் என்பதால் இந்திய சிறையில் இருப்பதையே அவன் பாதுகாப்பாகக் கருதினான். 1997 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் நேபாளத்திற்கு சென்றான். அங்கு சூதாட்டத்தில் ஈடுபடும்போது ஒரு பத்திரிக்கையாளர் இவனைப் பார்த்தார். அவருக்கு இவனுடைய குற்ற வரலாறு தெரியும். காவல்துறைக்கு அவர் தகவல் கொடுத்து இவன் கைது செய்யப்பட்டான்.

 

 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.