Skip to main content

7 ஆவது சீசனில் டி.என்.பி.எல்; தொடங்கும் தேதி அறிவிப்பு

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

TNPL in its 7th season; Notice of Commencement Date

 

டி.என்.பி.எல் ஏழாவது சீசன் ஜூன் 12 ஆம் தேதி தொடங்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்) ஐபிஎல் போட்டிகளைப் போலவே நடத்தப்படுகிறது. இந்தத் தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அதன்படி நெல்லை கிங்ஸ், சேப்பாக் கில்லீஸ், மதுரை பேந்தர்ஸ், கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் போன்ற அணிகள் விளையாடுகின்றன.

 

இந்தத் தொடர் 25 நாட்கள் நடைபெறும் எனவும் 32 ஆட்டங்கள் விளையாடப்பட இருக்கின்றன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், கோவை, நெல்லை என மூன்று இடங்களில் மட்டுமே ஆட்டம் நடைபெற இருக்கிறது என்றும் கடந்த ஆண்டுகளைப் போல் இல்லாமல் சென்னை, திண்டுக்கல் போன்ற இடங்களில் போட்டிகள் நடத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, ஜூன் 12 முதல் 30 ஆம் தேதி கோவையிலும், ஜூலை 1 முதல் 5 ஆம் தேதி நெல்லையிலும் லீக் ஆட்டங்கள் நடக்கும். முதல் தகுதிச் சுற்று சேலத்தில் ஜூலை 7, 8 தேதிகளில் நடைபெறும் என்றும் நெல்லையில் ஜூலை 10 ஆம் தேதி 2வது தகுதிச் சுற்று ஆட்டமும், 12 ஆம் தேதி இறுதி ஆட்டமும் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

TNPL - லில் களமிறங்கிய கெளதம் மேனன் மகன்

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

gautham menon son arya yohan started new career tnpl

 

கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கௌதம் மேனன். இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்று முன்னணி இயக்குநராக இருந்து வருகிறார். 

 

இதனிடையே இயக்குநர் கௌதம் மேனன் ப்ரீத்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யா யோஹன், துருவ், ஆதித்யா என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆர்யா யோஹன் கிரிக்கெட் வீரராக களமிறங்கியுள்ளார். இவர் தற்போது நடைபெற்று வரும் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சேலம் டைட்டன்ஸ் அணியும்,  நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதிய நிலையில் நெல்லை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற கௌதம் மேனனின் மகன் ஆர்யா யோஹனின் பங்கு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆர்யா யோஹன் மூன்று ஓவர்களில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார். அத்துடன் ஒரு ரன் அவுட்டும் செய்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். பொதுவாக திரை பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் கால் பதிப்பதை வழக்கமாக வைத்துள்ள நிலையில் சில பிரபலங்களின் வாரிசுகள் மட்டும் விளையாட்டு, உள்ளிட்ட மற்ற துறைகளிலும் கால்பதித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

பிரபல காகித ஆலையில் முறைகேடு: இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட்!

Published on 31/07/2021 | Edited on 31/07/2021
popular Paper Mill Two Officers Suspended

 

கரூர் டி.என்.பி.எல். காகித ஆலையில் கோடிக்கணக்கில் முறைகேடு செய்த அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முதன்மை பொது மேலாளர் பாலசுப்ரமணியம், தரக்கட்டுப்பாட்டு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். டி.என்.பி.எல். காகித ஆலைக்கு வெளிநாடுளில் இருந்து டாலர் பரிவர்த்தனை மூலம் டன் கணக்கில் நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தரமற்ற நிலக்கரி வாங்கியதில் கடந்த 4 ஆண்டுகளில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.