Skip to main content

விறுவிறுப்பாக நடைபெற்ற கூடைப்பந்து போட்டி; கடும் மழையிலும் நகராத ரசிகர்கள்

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
third day of the 64th All India Basketball Tournament at Karur

கரூரில் மூன்றாவது நாளாக 64ஆம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்றது. இதில்  வெற்றி புள்ளிகளை அடைய விளையாட்டு வீரர்கள் ஆர்வமுடன் விளையாடினர்.

கரூர் மாவட்ட கூடைப்பந்து கிளப் மற்றும் 64 ஆவது எல்.ஆர்.ஜி நாயுடு நினைவு ஆண்கள் கூடைப்பந்து போட்டி மற்றும் 10வது கரூர் வைசியா வங்கி கோப்பைக்காண பெண்கள் கூடைப்பந்து போட்டி கரூர் நகர பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் மைதானத்தில் மே 22 ஆம் தேதி துவங்கியது. இந்தப் போட்டியில், ஆண்கள் போட்டியில் 8 அணிகளும், பெண்கள் போட்டியில் 4 அணிகளும் விளையாடுகின்றன.

ஆண்கள் போட்டியில் சிஆர்பிஎஃப் புதுடெல்லி அணி சென்ட்ரல், செகேட்ரியேட் புதுடெல்லி அணியுடன் விளையாடியது. இதில்  சென்ட்ரல்  செகேட்ரியேட் புதுடெல்லி அணி 59 புள்ளிகள் பெற்றது. சிஆர்பிஎஃப் புதுடெல்லி அணி 30 புள்ளிகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது. அடுத்து நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியன் ஏர் ப்ரோஸ் புதுடெல்லி அணி 72 புள்ளிகள் பெற்று அதனை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியன் நேவி லோனவில்லா அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது.

இதே போல கேவிபி பெண்கள் கூடைப்பந்து கோப்பை காண போட்டியில் மும்பை சென்ட்ரல் ரயில்வே அணி 57 புள்ளிகள் பெற்று மும்பை வெஸ்டர்ன் ரயில்வே அணியை 50 புள்ளிகள் மட்டுமே பெறசெய்து தோற்கடித்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற கூடைப்பந்து ஆட்டத்தை கொட்டும் மழையை பொறுப்பெடுத்தாமல் கூடைப்பந்து ரசிகர்கள் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியே கண்டு ரசித்தனர் இந்தியன் நேவி லோனவில்லா அணியைத் தோற்கடித்து வெற்றி பெற்றது.

இதே போல கேவிபி பெண்கள் கூடைப்பந்து கோப்பைக்கான போட்டியில் மும்பை சென்ட்ரல் ரயில்வே அணி 57 புள்ளிகள் பெற்று மும்பை வெஸ்டர்ன் ரயில்வே அணியை 50 புள்ளிகள் மட்டுமே பெறச்செய்து தோற்கடித்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற கூடைப்பந்து ஆட்டத்தைக் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் கூடைப்பந்து ரசிகர்கள் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்ற அகில இந்தியக் கூடைப்பந்து போட்டியே கண்டு ரசித்தனர்

சார்ந்த செய்திகள்

 

Next Story

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
 Police arrest to Former Minister MR Vijayabaskar

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூன் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது கடுமையான விவாதங்களுக்கு பிறகு மூன்று தரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் ஜூன் 25 ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய வடமாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். வட மாநிலங்களுக்கு எம்.ஆர். விஜயபாஸ்கர் தப்பிச் சென்றதாக கூறப்படும் நிலையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

கோவிலில் யாகம் வளர்த்த பக்தர்கள்; விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Devotees who raised sacrifices in the temple; Banished bees

கரூர் மாவட்டம் அருகே உள்ளது நெரூர் பகுதி இந்தப் பகுதியில் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் இந்தக் கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக கும்பகோணத்தில் இருந்து ஆறு பக்தர்கள் அந்தக் கோவிலுக்கு வந்துள்ளனர். இதனால் கோவிலில் யாகம் செய்து பூஜை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்காக யாக குண்டம் அமைக்கப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. தீயில் உருவான புகை கோயில் முழுக்க பரவியது. அப்பொழுது கோவில் வளாகத்திலேயே இருந்த மரத்தில் தேன்கூடு ஒன்று இருந்தது. அதிகப்படியான புகையால் தேன் கூட்டில் உள்ள தேனீக்கள் கிளம்பின.

கோவிலில் இருந்த பக்தர்கள் அனைவரையும் தேனீக்கள் கொட்ட தொடங்கியது. உடனடியாக அனைவரும் கோவிலுக்கு உள்ளேயே ஒளிந்து கொண்டனர். தொடர்ந்து கரூர் தீயணைப்பு துறை எனக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு படையினர் பாதுகாப்பு உடை, முக கவசம் ஆகியவற்றை அணிந்து கொண்டு உள்ளே சென்று பக்தர்களை சலனமில்லாமல் ஒவ்வொருவராக வெளியே கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட அனைவரும் கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். யாகம் வளர்த்த புகையால் தேன் கூட்டிலிருந்து தேனீக்கள் கிளம்பி, கொட்டிய சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.