Skip to main content

அந்த ஒரு கேட்ச்.. அந்த ஒரு ஓவர்.. - பெங்களூரு எப்படி தோற்றது?

Published on 08/05/2018 | Edited on 08/05/2018

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எஞ்சியிருந்த தன் கோப்பைக் கனவுகளை, நேற்றைய போட்டியில் கோட்டை விட்டிருக்கிறது. இந்த சீசனின் தொடக்கத்தில் இருந்தே தோல்வியைச் சந்தித்து வந்த பெங்களூரு அணி, ப்ளே ஆஃப்புக்குள் நுழையும் வாய்ப்பையும் நேற்றோடு தவற விட்டிருக்கிறது. 

 

RCB

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் நடைபெற்ற நேற்றைய போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கைத் தேர்வுசெய்தது. மிகப்பெரிய மைதானம், குறைந்த ரன்கள் மட்டுமே அடிக்கமுடியும் போன்ற கணிப்புகள் எல்லாவற்றையும் உண்மையாக்கும் விதமாக பெங்களூரு அணியின் பவுலர்கள் நேற்று பந்துவீசினர். இந்த சீசன் முழுக்க அவர்கள் தொலைத்திருந்த அந்த மேஜிக், திடீரென்று வெளிப்பட்டாற்போல் பளிச்சென்று இருந்தது. 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

 

RCB

 

 

 

மிகச்சொற்பமான இலக்கென்றாலும், ஐதாராபாத் அணியின் பந்துவீச்சைக் கணக்கில் கொள்ளும்போது, இது போதுமானதாகவே இருந்தது. பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி, தொடக்கத்தில் சிறப்பாக ஆடினாலும், வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தின் தடுமாற்றம் அதன் விளையாட்டில் தெளிவாக தெரிந்தது. கேப்டன் கோலி மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த சமயத்தில் ஷகீப் அல் ஹசான் வீசிய பந்தை அடிக்கமுயன்றபோது, தவறுதலாக பட்டு தேர்டுமேன் திசையில் பறந்தது. கிட்டத்தட்ட சர்க்கிளைக் கடக்க இருந்த அந்த பந்தை யூசுப் பதான் ஒற்றைக்கையால் கேட்ச் பிடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். சேஷிங்கில் கிங்கான கோலியின் அந்த விக்கெட் ஆட்டத்தையே மாற்றியது. பெங்களூரு அணிக்கு மீதமிருந்த ஒற்றை நம்பிக்கையான டிவில்லியர்ஸும் அடுத்த ஓவரிலேயே ரஷித்கானிடம் தன் விக்கெட்டைப் பறிகொடுத்து ஏமாற்றினார். 

 

RCB

 

நிதானமாக ஆடினாலே போதுமானது என்பதைப் புரிந்துகொண்டு விக்கெட்டைப் பறிகொடுக்காமல் பெங்களூரு அணி ஆட்டத்தைத் தொடர்ந்தது. மந்தீப் சிங் மற்றும் கிராண்ட்கோம் இணை கடைசி ஓவர் வரை ஆட்டத்தை இழுத்துச் சென்றது. கடைசி ஓவரில் ஐந்து விக்கெட்டுகள் மீதமிருக்க 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், புவனேஷ்வர் குமார் பந்துவீச வந்தார். பேட்ஸ்மேன்களின் லெக்பேட்களைக் குறிவைத்து வீசப்பட்ட யார்க்கர்கள் திணறடித்தன. அந்த ஓவரில் ஒரு பவுண்டரி கூட கொடுக்காத நிலையில், புவனேஷ்வர் வீசிய கடைசி பந்தில் கிராண்ட்கோம் கிளீன் பவுல்ட் ஆகினார். இதன்மூலம், ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி பரிதாபமாக தோற்றது. 

 

இந்தப் போட்டியின் கடைசி ஓவரில் மெர்சல் காட்டிய புவனேஷ்வர் குமார் பலரது மனதையும் கவர்ந்திருக்கிறார். இருந்தாலும் அவருக்கு ஓய்வு தரும்படி ஐதராபாத் அணி நிர்வாகத்திற்கு பிசிசிஐ கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

6 நிமிடங்களில் 50 ரன்கள்! அதிசயிக்க வைத்த ஆர்.சி.பி.வீரர்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
50 runs in six minutes! Amazing RCB player will jacks

ஆறு நிமிடங்களில் 50 ரன்கள் அடித்து ஆர்.சி.பி.வீரர் ஒருவர் அதிரடியில் அதிசயிக்க வைத்துள்ளது சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

ஐபிஎல் 2024இன் 45ஆவது லீக் ஆட்டம் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நேற்றிய போட்டி முத்ற்கொண்ட், இனி ஆடும் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால்தான் பிளே ஆஃப் வாய்ப்பில் கொஞ்சமாவது நிலைத்திருக்க முடியும் என்பதால் பெங்களூரு அணிக்கு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. குஜராத் அணியும் வெற்றி பெற்றால்தான் பிளே ஆஃப் வாய்ப்பு வலுப்பெறும் என்பதால் ஆரம்பம் முதலே விறுவிறுப்பு தொடங்கியது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. சஹா, கில் இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த தமிழ்நாட்டு வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் ஷாருக்கான் ஆகியோரின் பொறுப்பான அதே நேரத்தில் அதிரடியான பேட்டிங்கால் குஜராத் அணி சரிவில் இருந்து மீண்டது. அதிரடியாக ஆடிய ஷாருக்கான் ஐபிஎல்-இல் தனது முதலாவது அரை சதத்தை பதிவு செய்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மில்லர் வழக்கம் போல அதிரடியாக 26 ரன்கள் எடுக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக ஆடிய சுதர்சன் அரைசதம் கடந்து 84 ரன்கள் குவித்தார். குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. சிராஜ், ஸ்வப்னில் சிங், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 201 ரன்கள் என்பது கடின இலக்கு போலத் தோன்றினாலும், எல்லா ஆட்டங்களிலும் எளிதில் அடிக்கப்படுவதால் நம்பிக்கையுடன் பெங்களூரு அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய பெங்களூரு அணிக்கு டு பிளசிஸ் நல்ல தொடக்கம் கொடுத்து 24 ரன்களில் வழக்கம் போல நடையைக் கட்டினார். எப்போதும் போல பொறுப்புடன் ஆடிய கோலியுடன் அதிரடி வீரர் வில் ஜேக்ஸ் இணைந்தார். குஜராத் அணியின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபக்கமும் சிதறடித்தார்.

50 runs in six minutes! Amazing RCB player will jacks

கோலி அரைசதம் கடந்து 70 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் நின்றார். மறுபுறம் வில் ஜேக்ஸ் 31 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அடுத்த ஆறு நிமிடங்களில் 50 ரன்கள் எடுத்து 41 பந்துகளில் சதமடித்தார். இதில் 10 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல்-இல் இது 5ஆவது அதிவேக சதமாகும். மாலை 6.41 க்கு அரை சதம் கடந்த வில் ஜேக்ஸ் 6.47 க்கு சதம் கடந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக ஆர்.சி.பியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அவர்கள் வெளியிட்ட பதிவும் வைரலாகி வருகிறது.  

Next Story

நீ கொடுத்ததை திருப்பிக் கொடுத்தேன்; பதிலடி தந்த சி.எஸ்.கே!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
csk vs srh csk beats sun risers hyderabad

ஐபிஎல்2024 இன் 46ஆவது லீக் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கம்மின்ஸ் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

தொடர்ந்து முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு பவர் பிளேயிலேயே முதல் விக்கெட் விழுந்தது. ரஹானே 9 ரன்களில் ஆட்டமிழக்க, 3ஆவது விக்கெட்டுக்கு மிட்செல் களமிறங்கினார். கடந்த ஆட்டத்தைப் போலவே பொறுப்புடனும் அதே நேரத்தில் அதிரடியும் காட்டிய ருதுராஜ் அரைசதம் கடந்தார். அவருக்கு ஈடுகொடுத்து ஆடிய மிட்செல் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த சிக்சர்களின் நாயகன் சிவம் துபே வழக்கம் போல அதிரடியாக சிக்சர்களை பறக்க விட ஆரம்பித்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் 98 ரன்களில் ஆட்டமிழந்தார். சிவம் துபே 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் பந்துவீச்சில் புவனேஷ்வர், நடராஜன், உனாத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

கடந்த சில ஆட்டங்களாக 200 ரன்கள் எளிதில் எடுக்கப்படுவதும், சன் ரைசர்ஸ் அணி இருக்கும் ஃபார்மிற்கு இந்த ஸ்கோர் போதுமா ரன ரசிகர்கள் நினைத்தாலும், கடந்த ஆட்டத்தில் 206 ரன்களை சன் ரைசர்ஸ் எடுக்க முடியாமல் பெங்களூரு அணியிடம் தோற்றதாலும், சொந்த மைதானம் என்ற நம்பிக்கையிலும் சென்னை அணி கேப்டன் ருதுராஜ் தன்னம்பிக்கையுடன் களமிறங்கினார். அந்த நம்பிக்கையை சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் வீணாக்கவில்லை.

சன் ரைசர்ஸ் அணி 18.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்து 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்க்ரம் 32, கிளாசென் 20, சமத் 19 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

குறிப்பாக கடந்த ஆட்டத்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த ஷர்துல், தேஷ்பாண்டே, முஸ்டபிசுர் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். மிகவும் சிறப்பாக பந்து வீசிய தேஷ்பாண்டே 27 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளும், பதிரனா, முஸ்டபிசுர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஜடேஜா, ஷர்துல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். சிறப்பாக ஆடி 98 ரன்கள் எடுத்து வெற்றிக்கு காரணமாக இருந்த ருதுராஜ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 5 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.