Skip to main content

புதிய தொழிலில் இறங்கிய ரவி சாஸ்திரி!

Published on 10/10/2020 | Edited on 10/10/2020

 

Ravi Shastri

 

இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி ஆண்கள் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் இறங்கியுள்ளார்.

 

ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ளார். அவர் தற்போது '23 யார்டஸ்' என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், அடோர் மல்டி ப்ரோடக்ட்ஸ் (Ador Multi products) என்ற அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இவ்விரு நிறுவனங்களும் இணைந்து 25 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களைக் கவரும் வகையில் பல்வேறு விதமான அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கின்றன. 51 சதவிகிதப் பங்கானது அடோர் மல்டி ப்ரோடக்ட்ஸ் நிறுவனத்திடமும், 49 சதவிகிதப் பங்கானது 23 யார்டஸ் நிறுவனத்திடமும் உள்ளன. 

 

 

Next Story

"ஐசிசி கோப்பைகளை வெல்வது எளிதல்ல... தோனி அதனை எளிதாக செய்து காட்டினார்" - மனம் திறந்த ரவி சாஸ்திரி

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

ravi shastri talks about indian cricket dhoni icc cup won history 

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்களை குவிக்க, இந்திய அணியோ முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 296 ரன்களை மட்டுமே எடுத்தது.

 

இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்களை இழந்து 270 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்து இந்திய அணிக்கு 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இந்திய அணி கடைசி இன்னிங்ஸில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி இந்திய அணியின் செயல்பாடு குறித்து கூறுகையில், "இந்திய அணி 2013 ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் தொடரை வென்ற பிறகு 10 ஆண்டுகள் ஆகியும் ஒரு ஐசிசி கோப்பையை கூட பெற முடியாமல் இருந்து வருகிறது. ஆனால் தோனி தலைமையிலான இந்திய அணி 2007 இல் நடந்த டி20 உலகக்கோப்பை, 2011இல் நடந்த ஒருநாள் உலக கோப்பை மற்றும் 2013இல் நடந்த  சாம்பியன்ஸ் டிராபி என 3 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. ஐசிசி கோப்பைகளை வெல்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால் தோனி அதனை எளிதாக செய்து காட்டியுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

"எனது கருத்து அஸ்வினை வருத்தப்படுத்தியிருந்தால் மகிழ்ச்சி" - ரவி சாஸ்திரி!

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

RAVI SHASTRI

 

இந்திய அணி கடந்த 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதில் கடைசி டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அப்போது பேசிய இந்திய அணியின் அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வெளிநாடுகளில் இந்திய அணி விளையாடும்போது, சுழற்பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ் முதல் தேர்வாக இருப்பார் என தெரிவித்தார்.

 

இந்தச் சூழலில் அஸ்வின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், குல்தீப் யாதவ் முதல் தேர்வாக இருப்பார் என்ற கருத்தால் தான் நொறுங்கிப்போனதாக தெரிவித்தார். இந்நிலையில், தனது கருத்தால் அஸ்வின் வருத்தப்பட்டிருந்தால் அது தனக்கு மகிழ்ச்சியே என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக ரவி சாஸ்திரி கூறியுள்ளதாவது, “ஒரு பயிற்சியாளராக நான் உங்களுக்குச் சொல்கிறேன். அங்கு எனது வேலை அனைவரது ரொட்டிக்கும் வெண்ணெய் தடவுவது அல்ல. எனது வேலை என்னவென்றால், எந்த நோக்கமும் இல்லாமல், உண்மைகள் எப்படி இருக்கிறதோ அப்படியே  சொல்வதுதான். சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில் அஷ்வின் விளையாடவில்லை. குல்தீப் விளையாடினார். அற்புதமாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார்.

 

அவர் பந்துவீசிய விதத்தை வைத்து வெளிநாடுகளில் இந்தியாவின் நம்பர் 1 [சுழல்] பந்துவீச்சாளராக அவர் இருக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளன என கூறினேன். அது வேறு ஒரு வீரரைக் காயப்படுத்தினால் நல்லது என்று கூறுவேன். திரும்பிப் பார்க்கையில், நான் அந்தக் கருத்தைக் கூறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது அவரை காயப்படுத்தி, இதனால் அவர் வருத்தப்பட்டதால் அவர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார். ஒரு வீரர் தனக்குள்ளே, ‘நான் யாரென்று இந்தப் பயிற்சியாளருக்கு காட்டப் போகிறேன், அவருக்குப் பாடம் கற்பிக்கப் போகிறேன், நான் என்ன செய்கிறேன் என்பதை அவருக்குக் காட்டப் போகிறேன்’ என நினைக்க வேண்டும் என விரும்பும் பயிற்சியாளர் நான்.

 

எனவே எனது கருத்து அவரை வருத்தப்படுத்தியிருந்தால், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அது அவரை வித்தியாசமாக ஏதாவது செய்ய வைத்திருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 2019இல் அவர் ஆஸ்திரேலியாவில் பந்துவீசிய விதம் சுண்ணாம்பு போன்றது. 2021இல் அவர் ஆஸ்திரேலியாவில் பந்து வீசியது வெண்ணெய் போன்றது. நான் எந்த நாளிலும்  வெண்ணெய்யைத்தான் தேர்ந்தெடுப்பேன்.” இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.