Skip to main content

ஜெஸ் ஜோனாசென் அணியில் இருந்தால் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை - ரீமா மல்ஹோத்ரா

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

 Nothing to worry about if Jess Jonassen is in the team - Reema Malhotra

 

மகளிர் பிரிமியர் லீக்கின் தொடக்க சீசனில் அதன் முதல் வெற்றியை தேடிக் கொண்டிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர்ந்து அதன் ஐந்தாவது தோல்வியைத் தழுவியது. மும்பை DY பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற, ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்.சி.பி அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மிகவும் இறுக்கமான ரன் துரத்தலில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. எலிஸ் பெர்ரியின் மற்றும் ரிச்சா கோஷின் ரேபிட்-ஃபயர் முறையே 67 ரன்கள் மற்றும் 37 ரன்கள் எடுத்து டெல்லி கேப்பிட்டல் அணிக்கு 151 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனை எதிர் கொண்ட டெல்லி கேப்பிட்டல் அணி 6 விக்கெட்டுகளுடன் 2 பந்துகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

 

டெல்லி கேப்பிட்டல் அணியில் மூன்று பேட்ஸ்மேன்கள் தலா 30 ரன்களுக்கு மேல் எடுத்தனர், குறிப்பாக ஜெஸ் ஜோனாசென் 15 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். இப்போது டெல்லி கேப்பிட்டல் ஐந்து ஆட்டங்களில் நான்கு முறை வெற்றியைப் பதிவுசெய்துபுள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு கட்டத்தில் ஆட்டத்தின் நிலை சிக்கலாக மாறியபோது, அந்த சூழ்நிலையை மிகவும் திறமையுடன் கையாண்டு அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்ற ஜோனாசெனுக்கு ஆட்டநாயகி விருது வழங்கப்பட்டது.

 

ஸ்போர்ட்ஸ்18 மற்றும் ஜியோசினிமாவின் WPL நிபுணரான ரீமா மல்ஹோத்ரா, நடந்து முடிந்த ஆட்டத்தில் ஜோனாசனின் விளையாட்டு அணுகுமுறையைப் பாராட்டினார். "உங்களிடம் ஜெஸ் ஜோனாசென் இருந்தால், நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. மேலும் அவர் பேட்டிங் செய்யும் விதத்தை பார்த்து நீங்களே 'எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம், ஏனென்றால் ஜெஸ் ஜோனாசென் இருக்கிறார்’ என்று கூறுவீர்கள்.

 

"டெல்லி கேப்பிட்டல் அணிக்கு அதிக ரன்கள் மற்றும் பெரிய ஷாட்கள் தேவைப்பட்ட போது, ​ஜெஸ் ஜோனாசென் தனது திறமையை வெளிப்படுத்தி அற்புதமாக விளையாடி அணியை வெற்றி நிலைக்கு அழைத்துச் சென்றார். இதற்கிடையில், ஸ்போர்ட்ஸ்18 மற்றும் ஜியோசினிமாவின் WPL நிபுணரான புனம் ரவுத், எலிஸ் பெர்ரியின் ஷாட் மேக்கிங்கைப் பாராட்டினார். அதே நேரத்தில் ஆர்.சி.பி அணியினர் தங்களின் அடுத்த ஆட்டத்தை எப்படி விளையாடி அணியை முன்னிலையில் நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இது மட்டுமில்லாமல் “ஆர்.சி.பி பேட்ஸ்மேன்கள் தங்களின் அணிகளுக்குள்ளே முந்தைய ஆட்டங்களில் பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடியவில்லை. இறுதியாக, பெர்ரியும், ரிச்சாவும் நல்ல பார்ட்னர்ஷிப்புடன் அபாரமாக விளையாடினர். இதனால் ஆர்.சி.பி அணி 150 ரன்களை எட்ட முடிந்தது. இருப்பினும், ஒரு பார்ட்னர்ஷிப் மட்டும் போதாது, மேலும் டெல்லி கேப்பிட்டல்ஸின் பங்களிப்பைப் போலவே அணிக்கு அதிக பார்ட்னர்ஷிப்களை உருவாக்க அதிக பேட்டர்கள் ஆர்.சி.பி-க்கு தேவைப்படுகின்றன. 

 

இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7:30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த விறுவிறுப்பான ஆட்டத்தை கலர்ஸ் தமிழ் ஜியோசினிமா, ஸ்போர்ட்ஸ்18-1, ஸ்போர்ட்ஸ்18கேல், கலர்ஸ் கன்னட சினிமா ஆகியவற்றில் நேரலையில் காணலாம்.

 

 

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.