Skip to main content

நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்; கே.எல் ராகுல் விலகல் - அதிரடி ஆட்டக்காரர் சேர்ப்பு!

Published on 23/11/2021 | Edited on 23/11/2021

 

kl rahul

 

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இருபது ஓவர் தொடரின் அனைத்து ஆட்டங்களையும் இந்தியா வென்ற நிலையில், அடுத்ததாக இரு அணிகளும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் மோதவுள்ளன. இந்த டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் விராட் கோலிக்கு முதலாவது டெஸ்டில் இருந்து மட்டும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல் ராகுல் மஸ்க்கில் ஸ்ட்ரைன் (muscle strain) காரணமாக நியூசிலாந்து தொடரிலிருந்து விலகியுள்ளார்.

 

இதனையடுத்து கே.எல் ராகுலுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா - நியூசிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (25.11.21) தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

அதிக ரன் குவிப்பு; தோனி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

KL Rahul broke Dhoni's record

 

ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த 5 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தனது முதல் போட்டியில் விளையாடியது. ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்றது.  நேற்றைய ஆட்டம் இந்திய அணியிடம் இருந்து நழுவி செல்லும் வகையில் தான் தொடக்கத்தில் இருந்தது. 

 

ஏனென்றால், 1.6 ஓவரிலேயே ரோகித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் என ஆட்டம் இழந்தனர். இந்த 20 ரன்களுக்கு 3 விக்கெட் சரிவில் இருந்து மீளுமா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்க, களத்தில் கே.எல்.ராகுலும், விராட் கோலியும் சற்று நம்பிக்கை தருவது போல இருந்தனர். இதன் பின், இருவரும் கைகோர்த்து நிதானமாக விளையாட இந்திய அணி மெல்ல மெல்ல வெற்றியை நோக்கி பயணித்தது. இதன் முடிவாக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. 

 

இந்த ஆட்டத்தில் விராட் கோலி 85 ரன்களுடன் 6 பவுண்டரிகள் எடுத்தார். கே.எல்.ராகுல் 97 ரன்களுடன் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் என எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து களத்தில் நின்றார். என்னதான் செஞ்சுரியை தவறவிட்டாலும், கே.எல்.ராகுல் ஆட்ட நாயகன் விருதினை பெற்றதோடு அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் பெற்றுள்ளார். அதாவது, உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பரில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார். 

 

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய விக்கெட் கீப்பர்களில் அதிகபட்ச ரன்கள் அடித்தவர் பட்டியலில், முதலிடத்தில் ராகுல் டிராவிட்- 145(இலங்கை எதிரணி), இரண்டாம் இடத்தில் எம்.எஸ்.தோனி - 91(இலங்கை எதிரணி) என இருந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் 97 ரன்கள் விளாசியதன் மூலம் தோனியை பின்னுக்குத்தள்ளி கே.எல்.ராகுல் 2 ஆம் இடம்பிடித்துள்ளார்.  

 

 

Next Story

விஜய் படத்தை ரசித்த கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ்

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

surya kumar yadav watching vaarisu movie

 

16 ஆவது ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபயர் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 233 ரன்கள் எடுத்து.  பின்பு ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்து இப்போட்டியில் தோல்வியுற்றது. 

 

இப்போட்டியில் தோற்றதால் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் விமானம் மூலம் மும்பைக்கு கிளம்பினர். அப்போது விமானத்தில் சூர்யகுமார் யாதவ் விஜய் நடித்த வாரிசு படத்தை பார்த்து ரசித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.