Skip to main content

வரலாறு படைக்குமா கோலி தலைமையிலான இந்திய அணி? இன்று பலப்பரீட்சை!

Published on 13/02/2018 | Edited on 20/02/2019

தென் ஆப்பிரிக்க கிரிக்கெர் அணியுடனான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் வைத்து இந்தப் போட்டி தொடங்குகிறது.

 

India

 

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு ஆறு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கெனவே நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 3 - 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஜோனஸ்பெர்க்கில் வைத்து நடைபெற்ற நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், பிங்க் ஜெர்சியுடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணியை சுலபமாக வீழ்த்தியது. அந்தப் போட்டியில் வெற்றிபெற்றிருந்தால் தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்ற சாதனையை இந்திய அணி படைத்திருக்கும். ஆனால், அன்றைய தோல்வி இந்திய அணியின் சாதனையை தள்ளிப்போட்டது.

 

கடந்த 2011ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கியது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று 2 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தாலும், அடுத்த மூன்று போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோற்று தொடரை இழந்தது. இந்நிலையில், இன்று நடைபெறவிருக்கு ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்று தொடரை வெல்லும் முனைப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.