Skip to main content

ரோகித் ஷர்மாவின் தலைமைப்பண்பு குறித்து மனம் திறக்கும் பும்ரா!

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

Bumrah

 

 

ரோகித் ஷர்மாவின் தலைமைப்பண்பு குறித்தும், அணியில் தனக்கு அளிக்கும் சுதந்திரம் குறித்தும் மும்பை அணியின் பந்து வீச்சாளர் பும்ரா மனம் திறந்துள்ளார்.

 

13-வது ஐபிஎல் தொடரானது அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை அணி, சென்னை அணியுடன் மோதிய போட்டியில் தோல்வியைச் சந்தித்தது. மும்பை அணி தன்னுடைய இரண்டாவது போட்டியில் கொல்கத்தா அணியுடன் நாளை மோத இருக்கிறது. தொடரில் முதல் வெற்றியைப்  பதிவு செய்ய இரு அணிகளும் தீவிர பயிற்சியில் உள்ளனர். இந்நிலையில் மும்பை அணியின் பந்துவீச்சாளர் பும்ரா, ரோகித் ஷர்மாவின் தலைமைப்பண்பு குறித்துப் பேசியுள்ளார்.

 

அதில் அவர், "ரோகித் ஷர்மா எனக்கு எப்போதுமே முழு சுதந்திரம் அளிப்பார். என் விருப்பத்தின்படியே பந்து வீச அனுமதிப்பார். எவ்வளவு இக்கட்டான நேரமாக இருந்தாலும் உன் விருப்பப்படியே பந்து வீசு என்பார். அது மேலும் நம்பிக்கையைத் தரும். நான் செய்கிற அனைத்திற்கும் நான் தான் பொறுப்பு என்கிற எண்ணம் என்னைக் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வைக்கும்" என்றார்.