Skip to main content

சச்சினை 13 முறை அவுட் செய்திருப்பேன்... தவறான தகவலால் கிண்டலுக்குள்ளான அக்தர்!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020

சச்சின் குறித்து அக்தர் இன்று சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு தகவலால் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் எவ்வளவு பரபரப்பாக இருக்குமோ, அதற்கு சிறிதும் குறைவில்லாதது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளக் சோயப் அக்தர், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கருக்கு பந்து வீசுவது. இருவரும் களத்தில் இருக்கும்போது இருநாட்டு ரசிகர்களும் உற்சாகமாகவும், பதட்டத்துடனும் இருப்பார்கள்.  

  ர



இந்நிலையில் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அக்தர், நான் சச்சினை 12, 13 முறை அவுட் செய்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவர் உண்மையில் 8 முறை மட்டுமே சச்சினை அவுட் செய்துள்ளார். ஒருநாள் போட்டியில் 5 முறையும், டெஸ்ட் போட்டியில் 3 முறை மட்டுமே அக்தர் சச்சினை அவுட் செய்துள்ள நிலையில், அவரின் இந்த தவறான தகவலை நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.